தமிழகம்- திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழர்கள் இன்று 36ஆவது நாளாக காலவரையின்றி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டம் குறித்து “நாம் போராட்டம் ஆரம்பித்து இன்றோடு 36ம் நாளை கடந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் எமக்கான விடுதலை குறித்து இன்னும் ஒரு முடிவும் வரவில்லை.
எனவே இன்றய நாளில் தீபந்தத்தை ஏந்திய வண்ணம் எமக்கான போராட்டத்தை நடத்தி வருகிறோம்” என போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.