ஸ்கொட்லாந்தில் நடைபெறும் காலநிலைமாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள பலநாட்டு அரச தலைவர்களும் வருகை தந்திருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவராக சிறீலங்கா அரச தலைவரான கோத்தபாய ராஜபக்சவும் வருகை தந்ததை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் பல நாடுகளிலும் இருந்து ஸ்கொட்லாந்துக்கு வருகை தந்து, போர்க் குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.
கோட்டாபயவிற்கு எதிரான போராட்டம் நடைபெறும் அதேவேளை, ‘மிக கண்ணியமான போராட்டக்காரர்களை கடந்து செல்ல நேர்ந்தது. இலங்கை ஜனாதிபதி Dunblane Hydro ஹோட்டலில் இருக்கிறார், அவரது மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் விதமாக போராட்டக்காரர்கள் கூடியிருக்கின்றனர். அவர்கள் கோஷமிடுவதைக் கண்டு நாய் அஞ்சியதால், கோஷமிடுவதை நிறுத்திய அவர்கள் அந்நாய் நடந்து செல்ல இடமளித்தனர்’. என குறித்த போராட்டம் தொடர்பாக அந்நாட்டு பொது மகன் ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Just walked through the most polite group of protesters. Sri Lankan president is at Dunblane hydro so protestors there about his human rights record. Dog was scared of the chanting so they stopped so he could get on with his walk!
— Andy Bryson (@ifellonithonest) November 1, 2021