புராதான சின்னங்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பூநகரி சோழர் காலத்து சிவாலயத்தினை பாதுகாக்கும் பணிகள் இன்று ஆரம்பித்த வைக்கப்பட்டன.
குறித்த சிவாலயமானது 11ம் நூற்றாண்டு காலத்துக்குரியது எனவும், சோழர்காலத்து சிவ வழிபாட்டுக்குரியதாகவும் தொல்பியல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த ஆலயத்தில் நீண்ட காலமாக முறையான வழிபாட்டு முறைகள் பின்பற்றப் பட்டிருக்கவில்லை. மேலும் தொல்லியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுவதற்காக குறித்த ஆலயம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.