தமிழக முதலமைச்சருடன் இந்திய உயர் ஸ்தானிகர் முக்கிய பேச்சுக்களை நடத்தினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பால்கே நேற்று சென்னையில் சந்தித்தார்.
இந்திய மீனவர்களின் நல்வாழ்வு மற்றும் மக்கள் – மக்கள் உறவுகளை வலுவாக்குதல் தொடர்பான விடயங்கள் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.