இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது- இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மண்டபம், இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 16 பேரையும் 2 விசைபடகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

நெடுந்தீவு மற்றும் தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 2 விசைப்படகில் இருந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் நீதி மன்ற நடவடிக்கையின்படி, வருகின்ற ஏப்ரல் 7ம் திகதி வரை யாழ்ப்பாணம் சிறையில்  தடுத்து வைக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து   இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மண்டபம், இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 16 பேரையும், 2 விசைப்படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி  800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்  மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய,மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இலங்கை வசமுள்ள மீனவர்களையும், படகுகளையும்  விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.