இந்தியா மேலும் இலங்கைக்கு உதவ வேண்டும்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் உதவ வேண்டும் என கேட்டுக்கொள்வதாக இலங்கையின் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச ஊடகமான பிபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார்.
“இலங்கைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவும் படி இந்திய அரசின் பிரதிநிதிகளிடம் கூறியிருக்கிறேன். மேலும் இந்தியாவின் வரிசெலுத்துபவரால் தரப்படும் உதவி, மக்களின் நலனுக்குப் பயன்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.