ரணில் விக்கிரமசிங்க அவசரமாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், அமைச்சரவையை அமைப்பதில் தாமதத்தைக் காண முடிகின்றது. புதிய இடைக்கால அமைச் சரவையில் 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை (20) வரையில் 13 பேர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.