டோல் லங்கா எனப்படும் இந்த நிறுவனம், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள், பழவகைகளை உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றது. வாழைப் பழங்களை ஏற்றுமதி செய்வதில் இந்த நிறுவனம் பிரசித்தி பெற்றது.
தென்னிலங்கைப் பகுதியில் 50,000 ஏக்கர்கள் அரச காணிகளில் டோல் நிறுவனம் உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் இலங்கை அரசு பெருமளவான வருமானத்தைப் பெற்று வருகின்றது.
ஆனால் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இரசாயனப் பசளை தொடர்பான நெருக்கடிகளே தமது இந்த முடிவுக்கான காரணம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.