மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை நிதியமைச்சராக பிரகடனப்படுத்தி பதாகை வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணி என்ற பெயரில் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள கௌரவ இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்துகள் என்று குறித்த பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.