மூதுாரில் புத்தா் சிலை – மக்களின் எதிா்ப்பை மீறி அமைக்கப்பட்டது

திருகோணமலை மூதூர் 64ஆம் கட்டை மலை எனப்படும் ராஜவந்தான் மலையில் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் ஆதரவுடன் விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப்புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் விகாரை அமைக்கப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலேயே இந்தப் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

முன்னதாக இலுப்பங்குளத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு எதிராக அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தனர். அந்த எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து விகாரை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மூதூரில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.