அவசரகால நிலை பிரகடனம் நேற்று (20) முதல் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 6ம் திகதி முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அது நிறைவேற்றப்பட்டு 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் அங்கீகரம் பெறப்பட வேண்டும். இதுவரை பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட்டிருக்காத நிலையிலேயே தன்னியல்பாக நேற்று (20) முதல் ரத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது