காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண பொலிஸ் தலைமை அலுவலகத்தில் 9 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, தொற்றுக்குள்ளான அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.