இலங்கை வான்படையின் கிபீர் விமானங்களை நவீன மயப்படுத்தும் உடன்பாடு ஒன்று இலங்கை அரசுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
50 மில்லியன் டொலர்கள் பெறுமதியில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் இலங்கை வான்படையிடம் உள்ள கிபீர் விமானங்கள் புதிய ரடார்கள், கண்காணிப்பு கருவிகள் மற்றும் ஆயுதங்கள் பொருத்தப்பட்டு நான்காம் தலைமுறை விமானங்களின் தரத்துக்கு உயாத்தப்படவுள்ளதான இலங்கை வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் எஃப்-16 மற்றும் எஃப்-15 தாக்குதல் விமானங்களின் வலிமை கொண்ட கிபீர் விமானங்கள் மூலம் இலங்கை வான்படை பெருமளவான அப்பாவி தமிழ் மக்களை குண்டுகள் வீசி படுகொலை செய்திருந்தது நாம் அறிந்ததே.