Home Blog Page 1874

செப்ரம்பர் மாதம் தடுப்பு மருந்து வந்துவிடும் – ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்

கோவிட்-19 வைரஸ் இற்கான தடுப்பு மருந்து பொதுமக்களின் பாவனைக்கு எதிர்வரும் செப்ரம்பர் மாதம் வந்துவிடும் என ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் வைரஸ் தொடர்பான ஆய்வுப் பேராசிரியர் சார கில்பேட் பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்த மருந்தின் உற்பத்தி வடிவமைப்பு நிறைவடைந்துவிட்டது, அதனை மனிதர்களில் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளை நாம் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம்.

அதன் பின்னர் அதனை மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும். பரிசோதனைகளை மேற்கொள்ளாது உற்பத்தியை ஆரம்பிக்க முடியாது. அது மனிதர்களுக்கு விசத்தை கொடுப்பது போல ஆகிவிடும்.

எனினும் நாம் உற்பத்தியை ஆரம்பிக்கும் போது பில்லியன் கணக்கான மருந்துகளை விரைவாக உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிலவைச் சுரண்டும் ட்ரம்பின் திட்டம்

அமெரிக்கா நிலவுக்குப் போய் தாதுப் பொருகள்களை சுரங்கம் தோண்டி எடுக்கவேண்டும் என்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

தொலைதூர விசும்பில் (அதாவது விண்வெளியில்) தாதுப் பொருள்களைத் தேடியெடுத்துப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு உரிமை உண்டு என்று தெரிவித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் ஒரு நிர்வாக ஆணை பிறப்பித்தார்.

விண்வெளியினை வளங்களைப் பெறுவதற்கான பொதுப் பரப்பாக அமெரிக்கா பார்க்கவில்லை என்றும், எனவே விண்வெளியில் தாதுப் பொருள்களை சுரங்கம் தோண்டி எடுக்க சர்வதேச ஒப்பந்தங்களின் அனுமதி தேவையில்லை என்றும் அந்த ஆணை தெரிவிக்கிறது.

ஆனால் எதற்காக விண்வெளியில் சுரங்கம் தோண்ட விரும்புகிறார் டிரம்ப்? அதனால் என்ன பலன் கிடைக்கும்?

ரேடியோ1 நியூஸ்பீட் சார்பில் சில வல்லுநர்களிடம் இது குறித்துப் பேசினோம்.

‘உயிர்வாழ்வை புவியைக் கடந்து கொண்டு செல்லுதல்’

நிலவில் சுரங்கம் தோண்டி தாதுப் பொருகள்களை எடுப்பது, மனிதர்கள் விண்வெளியில், செவ்வாய் போன்ற இடங்களை நோக்கி மேலதிக தூரம் பயணம் செல்வதற்கு உதவியாக இருக்கும் என்கிறார் சாரா குருடாஸ். இவர் ஒரு விண்வெளித்துறை இதழியலாளர். பால்வழிப் பயணத்துக்கான பெட்ரோல் நிலையமாக நிலவு ஆகும் வாய்ப்பிருக்கிறது என்கிறார் இவர். ஏனெனில் நிலவில் ராக்கெட் எரிபொருளுக்குத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் முதலியவை நிலவில் கிடைக்கும் என்கிறார் சாரா.

விண்வெளியில் ஒரு பெட்ரோல் நிலையம் இருந்தால், எரிபொருள் தீர்ந்துவிடும் என்று கவலை இன்றி, மேலதிக தூரம் பயணிக்க முடியும் என்பது இவர் கூற்று. புவிக்குப் பயன்தரக்கூடிய ஏராளமான வளங்கள் விண்வெளியில் இருப்பதால், அதைத் தேடுவது முக்கியம் என்கிறார் அவர்.

பருவநிலை மாற்றத்தை கருத்தில்கொண்டு உலகமே புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலங்களை நோக்கி நகர்கிறது. எனவே இத்தகைய விண் வளங்கள் தேவை என்கிறார் பேராசிரியர் பெஞ்சமின் சொவாகூல்.111723634 trumponthemoon976 நிலவைச் சுரண்டும் ட்ரம்பின் திட்டம்

இவர் சஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆற்றல் கொள்கை தொடர்பான பேராசிரியராக இருக்கிறார். விண்வெளியில் தாதுப்பொருள்களை தோண்டி எடுத்தால் அது மின்சார கார் போன்ற சாதனங்களைத் தயாரிக்க உதவியாக இருக்கும். இது நீண்டகால நோக்கில் சுற்றுச்சூழலுக்கு நல்லதாக இருக்கும் என்கிறார் அவர்.

அவசியமானதாக இருக்கிற லித்தியம், கோபால்ட் போன்ற தாதுக்கள் சீனா, ரஷ்யா, காங்கோ போன்ற இடங்களில் முக்கியமாக கிடைக்கின்றன. அவற்றைப் பெறுவது மிக கடினமானது. உலகெங்கும் உள்ள பல்வேறு சப்ளையர்களிடம் இருந்து இத்தகைய தாதுக்களைப் பெறுவது சிக்கலானது. ஏனெனில் ஒவ்வோர் இடத்துக்கும் ஒரு சட்டம், விதிமுறை உள்ளது. இந்த வகையில் பார்த்தால் நிலவில் சுரங்கம் தோண்டி இவற்றைப் பெறுவதுதான் சிக்கல் இல்லாதது என்கிறார் பெஞ்சமின்.

காங்கோ போன்ற இடங்களில் இத்தகைய பொருள்களை சுரங்கம் தோண்டி எடுக்கும்பணி பயங்கரமான சூழ்நிலைகளில் நடக்கிறது.

ஆனால் நிலவில் சுரங்கம் தோண்டுவது என்ற திட்டம், குறுகிய காலத்தில் புவியில் பருவநிலை மாற்றத்துக்குத் தீர்வு ஏதும் தராது என்றும் எச்சரிக்கிறார் பெஞ்சமின்.

அமெரிக்க – சீன நெருக்கடி

உலகின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில் தாதுக்களைப் பெறுவதற்கான வாய்ப்பு அமெரிக்காவுக்கு குறைவாக இருப்பதே நிலவில் சுரங்கம் தோண்டவேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டத்தின் பின்னணி காரணமாக இருக்கலாம்.

தாதுக்களைப் பெறுவதற்கான பந்தயத்தில் அமெரிக்கா தோற்றுவிட்டது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் முந்திச் செல்கின்றன என்கிறார் பெஞ்சமின். சீனா தோண்டி எடுக்கும் தாதுக்கள் உலகம் முழுவதும் கிடைக்கின்றன.

சீனர்கள் இல்லாத இடத்தில் உலோகங்களைப் பெற முடியுமானால் அது அதிபர் டிரம்ப் போன்ற ஆட்களை உண்மையில் கவரும். அத்தகைய ஓர் இடம்தான் விண்வெளி என்று கூறுகிறார் பெஞ்சமின்.

டிரம்ப் அதிபரானதில் இருந்து சீனாவுக்கும் – அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் இருந்து வருகிறது. இந்நிலையில், நிலவில் சுரங்கம் தோண்டுவது போன்ற திட்டம் தனது ஆதிக்கத்தையும், தலைமைத்துவத்தையும் நிலைநாட்டிக் கொள்ள டிரம்ப்புக்கு கிடைத்த வாய்ப்பு என்கிறார் இவர்.

சட்டம் என்ன சொல்கிறது?

விண்வெளியில் அமெரிக்க முயற்சிகளை சர்வதேச சட்டங்கள் கட்டுப்படுத்தாது என்று டிரம்ப் பிறப்பித்த ஆணை திட்டவட்டமாக கூறுகிறது. ஆனால், புவிக்கு வெளியே மனிதர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றிய சட்டங்கள் அவ்வளவு திட்டவட்டமாக வரையறுக்கப்படவில்லை.

விண்வெளி சட்டங்கள் என்பது வளர்ந்து வருகிறது. காலப்போக்கில் இதில் மாற்றங்கள் வரும் என்கிறார் சாரா.

எந்த ஒரு நாடும் நிலவுக்கு சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால் இது கடல்வழிச் சட்டம் போன்றது. நீங்கள் முதலில் சென்று, கண்டுபிடித்து, சுரங்கம் தோண்டினால், அதற்கு நீங்கள் உரிமையாளர் அவ்வளவே.

புவியில் பருவநிலை மாற்றம் நிகழ்ந்துகொண்டிருப்பதால் தொலைதூர விண்வெளியில் நம் பார்வையைப் பதிப்பது தவிர்க்கமுடியாதது என்கிறார் பெஞ்சமின். “இப்படியே போனால் புவியைக் குட்டிச்சுவராக்கிவிடுவோம் என்பதால், நமக்குப் போவதற்கு உள்ள ஒரே இடம் விண்வெளிதான் என்று சிலர் வாதிடுகின்றனர். விண்வெளியில் வளங்களைத் தேடுவது மட்டுமே மனித குலத்துக்கு உள்ள ஒரே மாற்றுவழி என்பது இந்தப் பார்வை உள்ளவர்களின் கூற்று” என்கிறார் அவர்.

நம் வாழ்நாளிலேயே இது நடக்குமா?

“இதற்கான தொழில்நுட்பம் உள்ளது. அது வேகமாகவும் வளர்ந்துவருகிறது. ஏனெனில், தனியார் நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன என்கிறார் சாரா. முன்பெல்லாம் அரசாங்கம் மட்டுமே இது போன்ற திட்டங்களுக்கு நிதியளித்து செயல்படுத்தும். ஆனால், தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் தற்போது ஈடுபாடு காட்டுவதால், நிறைய நிதியும், உத்வேகமும் கிடைத்துள்ளது என்று கூறுகிறார் அவர்.

vNShmJHXMyHUQqapyexJtU 1 நிலவைச் சுரண்டும் ட்ரம்பின் திட்டம்

நிலவில், விண் கற்களில், கடலில் சுரங்கம் தோண்டுவது, மனிதர்கள் செவ்வாய்க்குப் போவது போன்ற விவகாரங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படுவதை நாம் பார்க்கப்போகிறோம். நம் வாழ்நாளிலேயே இவையெல்லாம் சாத்தியமாகும்” என்பது சாராவின் கூற்று. ஆனால், ஏற்கெனவே புவியில் உள்ள சுரங்கத் திட்டங்களில் தொழில்நுட்ப மேம்பாட்டைப் பயன்படுத்துவதும் முக்கியம் என்கிறார் பெஞ்சமின்.

நிலவில் சுரங்கம் தோண்டுவது என்பது கடினமானது, அது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்கும் என்கிறார் அவர். “எனவே, வாயு, நீரடி சுரங்கம் போன்ற ஏற்கெனவே இருக்கும் சுரங்கங்களை முதலில் மேம்படுத்துங்கள். பிறகு அடுத்தக் கட்டத்துக்குப் போகலாம்” என்பது அவரது வாதம்.

நிலவில் சுரங்கம் தோண்டுவது போன்றவை நடக்க குறைந்தது 10-15 ஆண்டுகள் ஆகும் என்று கூறும் அவர் அதன்பிறகும்கூட இத்திட்டத்தின் எதிர்காலம், பணம், வளங்கள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தே அமையும் என்கிறார் பெஞ்சமின்.

ஆனால், இதனிலும் பெரிய விஷயத்தின் அங்கமே இதெல்லாம் என்கிறார் சாரா. “நீங்கள் நிலவைப் பார்க்கிறீர்கள். நாங்கள் வானத்தைப் பார்க்கிறோம். மனித குலத்தை புவியைத் தாண்டியும் கொண்டு செல்வதற்கான திட்டத்தின் ஒரு பகுதியே இது” என்பது சாராவின் கூற்று.

தகவல் – பிபிசி

சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கை தமிழ் மக்களை அதிகம் பாதித்துள்ளது(நேர்காணல்)

சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கை வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அரசின் உதவித் திட்டங்கள் கூட மக்களை முழுமையாக சென்றடையவில்லை என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழத் தேசிய முன்னனியின் நாடாளுமன்ற வேட்பாளருமான அனந்தி சசிதரன் எமக்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதன் முழு விபரம் வருமாறு:

கேள்வி- நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்?

வடக்கு கிழக்குடன் மலையகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இங்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தி மீண்டும் போடப்படுகின்றது. இந்நிலையில் அன்றாட கூலித் தொழிலாளிகள், வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கின்ற மக்களிடம் காசும் இல்லை. அவர்களின் கைகளில் பொருட்களும் இல்லை.

எங்கோ கோரோனா தொடங்கும் போது,இங்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் வரும் என அரசிற்கு தெரிந்திருந்தால் மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஒழுங்குபடுத்திய பின்னர் இந்த ஊரடங்குச் சட்டத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் மிகக் குறுகிய காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப் படுத்தியிருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் இருபத்தியொரு நாட்களாக இந்த ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக இருக்கின்றது.

கொரோனா அல்லாது ஏனைய நோயால் பாதிக்கப்பட்டு கிளினிக் செல்ல முடியாது மருந்துகளை பாவித்துக் கொண்டிருக்கும் நிலை மக்களிடம் இருக்கின்றது. கொரோனா நோய்க்கு வெளிநாட்டினரது வருகையும் ஒரு காரணமாக இருக்கலாம். யாழ்ப்பாணத்தில் கொரோனா நோய்த் தொற்றால் ஒருவரும் இனங்காணப்படவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பிரஜையால் பரப்பப்பட்டது எனப் பார்க்கின்றோம்.

அரசாங்கத்தில் வறுமையானவர்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி உதவிகூட சீராக மக்களுக்கு சென்றடையவில்லை என்பது ஒரு வருத்தம். வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், அன்றாடம் உழைத்து வாழும் மக்கள், மாற்றுத் திறனாளிகள், காணாமல் போனோர் குடும்பம், அரசியல் கைதிகள் குடும்பம் உட்பட மொத்தக் குடும்பமும் போரிலிருந்து மீளாத வறுமையிலேயே உள்ளனர்.

ஏனெனில் நிலையான வாழ்வாதார உதவித் திட்டங்களை அரசாங்கம் அங்கு மேற்கொள்ளவில்லை. அன்றாடப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு திட்டங்களை முன்னெடுத்ததே அன்றி கடந்த பத்து வருடங்களாகியும் நிலையான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுக்கவில்லை.

சில விவசாயிகள் இருக்கும் நெல்லை வைத்து கஞ்சி குடிக்கக்கூடிய வசதியுடன் இருந்தாலும்,ஏனைய மக்களுக்கு கடினமாகவே உள்ளது. புலம்பெயர் மக்களும் குறுகிய ஒரு கொடுப்பனவுடன் வாழும் நிலையில் இருப்பதால்,அவர்கள்கூட இங்கு இருக்கும் மக்களுக்கு உதவி செய்யும் சூழல் இல்லை. காசு அனுப்புவதற்கான வழிமுறைகளும் அங்கு இல்லை. இன்று கூடுதலான மக்களின் வாழ்வாதாரம் புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்பிலேயே பெரிதும் தங்கியுள்ளது .

இன்று வடக்கு நிலைமையைப் பார்த்தால், தொண்டு நிறுவனங்கள், தனவந்தர்கள், இளைஞர் அமைப்புகள்,நிறுவனங்கள்,சில அரசியல்வாதிகள் ஆகியோரே உதவி செய்து வருகின்றனர். இது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. ஒரு நெருக்கடி நிலை வரும் போது அரசாங்கமே அந்த நிலையை மாற்றி அமைக்கலாம்.

எந்தெந்த பிரதேசங்களுக்கு உதவித் திட்டங்கள் செல்லவில்லை என்று நாங்கள் சொல்லலாம். ஆனால் அரசாங்கமே கிராம மட்ட பொறிமுறை ஊடாக இந்த உதவிகளை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயக நாடு என்று சொல்லும் போது தொடர்ச்சியான ஊரடங்கை மேற்கொள்வதும் விமர்சிக்கப்படக்கூடிய விடயமாகும்.

கேள்வி-தற்போது தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்த பல தமிழ்க் கட்சியினர் இருக்கின்றனர். இப்படி பல கட்சியினர் இருப்பதால், தமிழ் மக்களுக்கு அல்லது தமிழ் வேட்பாளர்களுக்கு எவ்வாறான பாதிப்பு ஏற்படுகின்றது?

பல கட்சிகள் வந்தாலும்,எந்தக் கட்சிகள் எந்த செயற்பாட்டை முன்னெடுக்கப் போகின்றனர் என்று மக்களுக்குத் தெரியும். மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு வந்து விட்டது. எமது மக்களை தொடர்ச்சியாக ஏமாற்ற முடியாது. தமது வாக்குகள் சிதறடிக்கப்படாத ஒரு தெரிவை மக்கள் எடுப்பார்கள்.

கடந்த காலங்களில் என்ன செய்வதென்று அறியாமல் கண்மூடித்தனமாக கூட்டமைப்பை ஆதரித்துச் சென்ற நிலைமை தற்போது இல்லை. தற்போது புதிதாக வாக்காளர்களாக இருக்கும் இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் மிகவும் தெளிவான சிந்தனை உள்ளது. எனவே வெற்றி பெறுபவர்களுக்கு வாக்குகளை அவர்கள் வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.

செல்லுபடியற்ற வாக்குகள் எங்களின் ஓரிரு ஆசனங்களை இல்லாது செய்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. ஆனால் மக்கள் எந்த வேட்பாளர் மக்களுக்கு ஆதரவாக, விலைபோகாது நிற்பார்கள் என்று தெரிவு செய்து அவர்களை ஆதரிப்பார்கள்.

கேள்வி-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் எவ்வாறான தவறுவளை விட்டிருக்கின்றது. அதனை உங்களின் கட்சி எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது? புதிதாக ஏதாவது தீர்மானங்கள், திட்டங்கள் உங்களிடம் உள்ளதா?

நாங்கள் வடக்கில் இன அழிப்பு பிரேரணையை கொண்டு வரும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தன் உட்பட தமிழரசுக் கட்சி முழுமையாக தனது எதிர்ப்பை வெளியிட்டது மட்டுமல்ல, இன அழிப்பு நடந்தது அதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என நாங்கள் எழுப்பிய தீர்மானம் தான் விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவித்தது.

அது நம்பிக்கையில்லாப் பிரேரணை வரை கொண்டு வந்தது. மக்களின் தேவைகளை வடக்கில் நாங்கள் செய்ய முடியாது ஆளும் தரப்பிற்குள்ளேயே எதிர்த்தரப்பு ஒன்றை தமிழரசுக் கட்சி உருவாக்கியது. தங்களின் சொந்த பிரதிநிதிகளுக்கே இவ்வாறான ஒரு செயற்திட்டத்தை முன்னெடுத்தது.

இதைவிட ஐ.நா. சபையில் இரண்டு வருடகால நீடிப்பு வழங்க வேண்டும் என்று அரசிற்கு ஆதரவு தெரிவித்ததும் இதே தமிழரசுக் கட்சியும் இந்தக் கூட்டமைப்பும் தான். மக்களின் விருப்பங்கள் ஒன்றாக இருந்த போது தேர்தல் காலத்தில் அவர்களிடம் ஆணையைப் பெற்றது, விஞ்ஞாபனம் ஒன்றாகவும் நடவடிக்கை வேறாகவும் அமைந்தது. குழப்பமான காலகட்டத்தில் இவர்கள் ஐ.தே.க. க்கு ஆதரவு தெரிவித்தனர்.

இது அவர்களின் சுயநல அரசியல் இலாபமாக இருந்தது. ஜனாதிபதி தேர்தலின் போது எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்காது, பல்கலைக்கழக மாணவர்களின் 13 அம்சக் கோரிக்கையைக்கூட செல்லுபடியற்றதாக்கி பல்கலைக்கழக மாணவர்களையும் புத்திஜீவிகளையும் உதாசீனப்படுத்தியது.

மேலும் பலவற்றை கூறிக்கொண்டே போகலாம். மேலும் தேர்தல் காலங்களில் விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிக்கவிட்டு, பிரபாகரனின் படத்தை தாங்கி வாக்கு கேட்டுவிட்டு, இப்போது விடுதலைப் புலிகள் தங்களுக்கு குண்டு வைக்க வந்தார்கள் என்று கூறி கைதான அப்பாவி இளைஞர்களையும் நாங்கள் பார்க்கின்றோம்.

இவர்கள் மீண்டும் தேர்தல் வரும் போது இதையே மீண்டும் செய்யும் ஒரு போலி அரசியலை நாங்கள் கண்டிருக்கின்றோம்.இவர்கள் விட்ட குறைகளை நாங்கள் விடக்கூடாது என்ற தெளிவுடன் இருக்கின்றோம். நாங்கள் மக்களுடன் பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டு அதையே மேற்கொள்ளும் அரசியலை நாங்கள் செய்யவுள்ளோம்.

கேள்விஅண்மையில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நீங்கள் கலந்து கொண்டிருந்தீர்கள். அது தொடர்பாக என்ன கருத்துக்களைக் கூற விரும்புகின்றீரகள்?

ஐ.நா. கூட்டத்தொடருக்கு சென்றிருந்த போது ஐ.நா. சபையில் சில தனிப்பட்ட சந்திப்புகளை நான் ஒழுங்குபடுத்தியிருந்தேன். ஆனால் வழமையாக நாங்கள் பேசும் இடத்தில் மோசமான சக்திகளின் தலையீடு காரணமாக நான் பேச அனுமதிக்கவில்லை. அந்த சக்திகளை நான் மிகவும் ஆபத்தானதாக பார்க்கின்றேன்.

அது தனி நபராக இருக்கலாம் அல்லது அமைப்பாக இருக்கலாம். அதை இனங்காண முடியவில்லை. இதனால் நான் ஐ.நா. சபையில் பேசவில்லை. அரசியல் தளத்தில் மற்றும் மனித உரிமைகள் தளத்திலிருந்து என்னை நீக்க பல சதி வேலைகள் நடைபெறுகின்றது என்பதை நான் பின்னர் அறிந்தேன்.ஆனால் எனது பணி தொடரும். எனது கணவனை என் கையால் கொடுத்து விட்டு தேடும் நான் இந்த எல்லா பணியிலும் தோற்றும் ஒருவராக இருக்கின்றேன். நான் ஒரு உயிர் வாழும் சாட்சியம்.

தாவடி முடக்கநிலை முடிவுக்கு வந்தது

கடந்த 21 நாட்களாக கொரோனா தொடர்பில் முடக்கப்பட்டிருந்த யாழ்.தாவடிக்கிராமம் இன்று இயல்புநிலைக்கு திரும்புகிறது.யாழ்குடாநாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்றுக் குள்ளான நபர் வசித்த கிராமம் என்பதலால் இந்த கிராமம் சுகாதாரத் துறையினரின் அறிவுரைக்கேற்ப தனிமைப்படுத்தப்பட்டிருந்த்து.

முடக்கப்படிருந்த தாவடிக் கிராமம் கொரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத் துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டு அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நடமாட அனுமதிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் கடந்த மார்ச் 22ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டார்.

அன்றைய தினத்திலிருந்து அவரது வதிவிடத்தைச் சூழவுள்ள கிராமம் சுகாதாரத் துறையினரால் இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் முடக்கப்பட்டது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய 21 நாள்களின் பின்னர் தாவடிக் கிராமம் இன்று சுகாதாரத் துறையினரால் விடுவிக்கப்பட்டது.

ஊரடகு தளர்த்தப்படும் மாவட்டங்கள் தொடர்பில் வெளியானது தகவல்

தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டமானது புத்தாண்டுக்குப் பின்னர் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசனை செய்து வருவதாக அரசாங்கத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, அம்பாந்தோட்டை, நுவரெலியா, மாத்தளை, அம்பாறை, திருகோணமலை, மொனராகலை, அனுராதபுரம், வவுனியா, பொலன்னறுவை, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு ஊரடங்கு நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படாமையே இதற்கு காரணத்தின் அடிப்படையில் இந்த முடிவுக்கு அரசாங்கம் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாதுக்க, சீதாவக்க மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பியகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக குறிப்பிட்ட சில பிரதேசங்களில் பகுதி பகுதியாக ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் என்று பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட நிர்வாகத்தினால் புறக்கணிக்கப்படுகிறோம்-பிரதேசசபை தவிசாளர்கள்

கொரனா வைரஸ் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலான தீர்மானங்கள் எடுக்கும் கூட்டங்களில் எதிலும் பிரதேச சபையின் தவிசாளர்கள் எவரும் அழைக்கப்படுவதில்லை.பிரதேச செயலாளர்கள்,உள்ளுராட்சிமன்ற உதவி ஆணையாளரைக்கொண்டு தீர்மானங்களை எடுப்பதை மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள் ஒன்றியம் வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபைகளின் ஒன்றியத்தின் செயலாளரும் மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளருமான சோ.மகேந்திரலிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் நேற்று மண்முனைப்பற்று பிரதேசசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்ட மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள் ஒன்றியத்தின் தலைவரும் மட்டக்களப்பு தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளருமான என்.புஸ்பலிங்கம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேசசபைகளின் தவிசாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கொரனா அச்சுறுத்தல் நிலவும் இக்காலப்பகுதியில் பிரதேசசபைகளினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களுககு வழங்கும் வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அதனை தொடர்ந்து இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபைகளின் ஒன்றியத்தின் செயலாளரும் மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளருமான சோ.மகேந்திரலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

பிரதேசசபை தவிசாளர்களின் அதிகாரம் தொடர்பாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில் முறையான அதிகாரிகள் என்பது அந்ததந்த பிரதேசங்களில் உள்ள பிரதேசசபைகளின் தவிசாளர்கள் என்பது தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொரனா வைரஸ் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கும் கூட்டங்களில் எதிலும் பங்குகொள்வதற்காக அழைக்கப்படவில்லையென்பதுடன் பிரதேச செயலாளர்கள்,உள்ளுராட்சி உதவி ஆணையாளர் உட்பட்ட அரச அதிகாரிகளைக்கொண்டு மாவட்ட மட்டத்தில் தீர்மானங்கள் எடுப்பதை மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபையின் தவிசாளர்கள் ஒன்றியம் என்ற வகையில் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது மக்களுக்காக இருபத்திநான்கு மணி நேரமும் களத்தில்நின்று ஒவ்வொரு பிரச்சினைக்கும் முகம்கொடுத்து அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இரவு பகல் பாராது செயற்பட்டுவரும் மாவட்ட பிரதேசசபை தவிசாளர்களாகிய நாங்கள் மக்கள் தொடர்பான தீர்மானங்கள் எடுப்பதில் எவ்வித பங்களிப்பினையும் செய்யாத இக்கட்டான நிலைக்கு மாவட்ட நிர்வாகத்தினால் முன்னெடுத்துசெல்லப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

பிரதேச செயலகங்கள் ஊடாக மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடி எடுக்கப்படும் தீர்மானங்கள் உள்ளுராட்சி உதவி ஆணையாளரினால் பிரதேசபையின் செயலாளர்களுக்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்படுகின்றபோது அவற்றினை செயற்படுத்துகின்ற விதத்தில் மக்கள் நலன் கருதுகின்றவர்கள் என்ற வகையில் பொறுiமையுடன் அந்த தீர்மானங்களை செயற்படுத்திவந்தோம். ஆனால் தொடர்ந்து தவிசாளர்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் மாவட்ட செயலக தீர்மானங்களை செயல்படுத்துவதில் நாங்கள் பாரிய இடர்பாடுகளை எதிர்கொள்கின்றோம். மக்களின் கேள்விகளுக்கு எங்களால் பதிலளிக்கமுடியாதநிலையேற்படுகின்றது.

இந்த அடிப்படையில் அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில் தனிப்படுத்தல் ஓழுங்குவிதிகள் ஒழுங்குபடுத்தல் முறையான அதிகாரி என்ற வகையில் பிரதேசசபையின் தவிசாளர்கள் அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் ஊடாகவே தனிமைப்படுத்தல்ääநிவாரணம் வழங்கல்,தொற்று நீக்கல் உட்பட சகல விடயங்களும் கையாளப்படவேண்டும் என தவிசாளர்கள் ஒன்றியம் தீர்மானம் எடுக்கின்றது.

மற்றும் அனைத்து அரசுசார்,அரசசார்பற்ற நிவாரணங்களும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படுகின்றபோது அதில் ஏற்படும் சரிபிழைகள்,பொருத்தப்பாடு அற்ற செயற்பாடுகள்,எமது தவிசாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டு அந்த தவறுகள் நிவர்த்திக்கப்படவேண்டுமாகவிருந்தால் பிரதேச செயலாளர்கள் பிரதேசசபை தவிசாளர்களுடன் கலந்துரையாடவேண்டும்.

எமது பகுதிகளில் உள்ளுர் உற்பத்திகள் போதியளவு உள்ளபோதிலும் வெளியிடங்களில் இருந்து மரக்கறி மற்றும் அதனோடினைந்த பொருட்களை கொண்டுவருவதன் மூலம் எமது உள்ளுர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதோடு தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதிலும் திண்டாடுகின்றனர்.இந்த நிலையினை நீக்குவதற்கு எமது மாவட்ட உள்ளுர் உற்பத்திகளை கொள்வனவு செய்து மாவட்டத்திற்குள்ளும் வெளியிலும் விநியோகம் செய்ய மாவட்ட செயலகம் நடவடிக்கையெடுக்கவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த பலர் தொழில்வாய்ப்புகளுக்காக மாவட்டத்திற்கு வெளியே சென்றவர்கள் உணவுமின்றி மிகவும் கஸ்டமான நிலையில் உள்ளதாக தெரியவருகின்றது.அவர்களை இங்கு கொண்டுவந்து அந்ததந்த பகுதிகளில் தனிமைப்படுத்தல்களை மேற்கொண்டு அவர்களை குடும்பத்துடன் இணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மாவட்ட செயலகம் மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு.

வீட்டில் இருந்து பணி புரியும் காலமானது ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து பணி புரியும் காலமானது விடுமுறை தினம் இல்லை எனவும் அரச மற்றும் தனியார் துறை பிரதானிகளின் அறிவுரைக்கு அமைய முடிந்தளவு வீட்டில் இருந்தவாறு வேலை செய்யுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதாரம், வங்கி, போக்குவரத்து மற்றும் அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தரப்பினருக்கு இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரிய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.