Home Blog Page 1881

ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் சில மாற்று நடவடிக்கை – நகரசபை தவிசாளர்

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் எடுக்கப்பட்ட சில மாற்று நடவடிக்கைகளில் இன்னும் சில மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளhttp://www.ilakku.org/wp-admin/admin.php?page=pvcp-listதாக வவுனியா நகரசபை தவிசாளர் கௌதமன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் முன்னெடுக்கபட்டுவரும் ஊரடங்கு சட்டம் நாளை தளர்த்தப்படுகின்றது. எனவே அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் நகரை நோக்கி அதிகளவில் வரும் நிலை காணப்படுகின்றது. கடந்த திங்கட் கிழமை ஊரடங்குசட்டம் தளர்தப்பட்டபோது அதிகமான பொதுமக்கள் நகரை நோக்கி வருகை தந்தமையால் திட்டமிட்ட வகையில் சன நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போயிருந்தது. இதனால் வைரஸ் தாக்கம் இலகுவாக பரவகூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

எனவே நாளையும் அந்த நிலை ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. அதனை தடுக்கும் நோக்கில் பல்வேறு மாற்று நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம் . அந்தவகையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை தாங்களே எடுத்துவந்து விற்பனை செய்துகொள்ள முடியும். அதற்காக சில பகுதிகளை நாம் ஒதுக்கியுள்ளோம்.

காமினி மகாவித்தியாலய விளையாட்டு மைதானம் , ஹொறவபொத்தான வீதியில் ரோயல் உணவகத்திற்கு முன்பாகவும், தமிழ்மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பான பகுதி மற்றும் புதியபேருந்து நிலையத்திற்கு முன்பான பகுதிகளில் அவற்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் சன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், சமூக இடைவெளியினை பேணும் வகையிலும் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் காமினி மகாவித்தியாலய மைதானத்திற்குள் மரக்கறி வகைகள் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யவும், மீன், இறைச்சி, தேங்காய் ஆகிய பொருட்களை காமினி மகாவித்தியாலய மைதானத்திற்கு வெளியிலும், வாகன தரிப்பிடத்தினை காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியோரத்திலும் நிறுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகமான சனநெரிசலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சில வீதிகளை ஏற்கனவே மூடியுள்ளோம். அவ்வாறாக மூடப்பட்ட வீதிகள் தொடர்ந்து அமுலில் இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் மக்கள் நலன் கருதி சமூக இடைவெளியினை பேணவே இவ்வாறான சில மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,

தற்போது வெயில் அதிகமாக காணப்படுவதனால் காமினி மகாவித்தியாலய மைதானத்திற்குள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தற்காலிக பந்தலினை கொண்டுவந்து தாங்களே அமைத்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடுமாறும்

நகரசபை தவிசாளர் இ.கௌதமன்

10 தொன் மருந்துகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியது

தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக இந்தியா 10 தொன் உயிர் காக்கும் மருந்துகளை இலங்கைக்கு இலவசமாக அனுப்பி வைத்துள்ளது.

இந்த மருந்துகளை இலங்கை அரசு கேட்டுக் கொண்டதற்கமையவே எயார் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் இவற்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்தியத் தூதரகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையுடன் மழையிலும் வெயிலிலும் இணைந்து நிற்கும் இந்தியா. இந்தியாவின் உறுதிப்பாட்டின் மற்றொரு வெளிப்பாடு இது.

சொந்த உள்நாட்டு சவால்கள் மற்றும் தடைகள் இருந்த போதிலும் இந்தியா தனது வளங்களையும், நிபுணத்துவத்தையும் தனது நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக இந்தியா 10 தொன் உயிர் காக்கும் மருந்துகளை இலங்கைக்கு இலவசமாக அனுப்பி வைத்துள்ளது.

இந்த மருந்துகளை இலங்கை அரசு கேட்டுக் கொண்டதற்கமையவே எயார் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் இவற்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்தியத் தூதரகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையுடன் மழையிலும் வெயிலிலும் இணைந்து நிற்கும் இந்தியா. இந்தியாவின் உறுதிப்பாட்டின் மற்றொரு வெளிப்பாடு இது.

சொந்த உள்நாட்டு சவால்கள் மற்றும் தடைகள் இருந்த போதிலும் இந்தியா தனது வளங்களையும், நிபுணத்துவத்தையும் தனது நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அனுப்பப்பட்ட மருந்துகள் நேற்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தன.

இந்த நெருக்கடி மிக்க சூழலில் இலங்கை மக்களைக் காப்பாற்றுவதற்காக மருந்துகளை இலவசமாக கொடுத்து உதவிய இந்தியப் பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் கோத்தபயா ராஜபக்ஸ நன்றி தெரிவித்து தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.india gifts 10 ton consignment of medicines to sri lanka 2 1586334332 10 தொன் மருந்துகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியது

பேரனர்த்த காலங்களும் உள்ளூர் மருத்துவ முறைமைகளின் தேவைப்பாடும் – ச.புஸ்பலதா (கிழக்குப் பல்கலைக்கழகம்)

ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சியானது உலகலாவிய ரீதியில் பெரும் வளர்ச்சியினை எட்டி சென்ற போதும் இன்று உள்ளூர் மருத்துவம் கை மருத்துவம், பாட்டி வைத்தியம் மற்றும் மூலிகை மருத்துவத்தின்   தேவையினையும் மனிதர்கள் நாடி நிற்கின்றனர்.

நவீன அறிவியலாளர் மேற்கு ஐரோப்பிய  நாடுகளின் மருத்துவ முறையினை தரமானது, நம்பகத்தன்மையானது என கட்டமைத்தனர். காலனித்துவ கல்வி முறையின் ஊடாக மேற்கத்தய மருத்துவமான ஆங்கில மருத்துவ முறை கொண்டு வரப்பட்டது. “மிசனரி கல்வி” என்ற முறையின் ஊடாக  அறிவாற்றல், விழிப்புணர்வு, சிந்தனை வளர்ச்சி எனும் காலனிய  கொள்கையினை  உள்ளூர் மக்கள் இடத்தில் பரப்பவும் மருத்துவத்தின் மூலம்  தம் இலக்கினை நிறைவேற்றவும் வகையிலான  சமூகத்தினை உருவாக்கினார்கள்.

இன்று மனிதரின் ஆரோக்கிய வாழ்க்கையினை கூட நுகரும் பொருளாக  மாற்றியுள்ளனர்.ஆனால் உள்ளூர் மருத்துவமானது உள்ளூர் அறிவு திறனுடன் காலம் காலமாக பயின்றும் பயன்பாட்டிலும் பரிசோதனையிலும் இருந்து வந்துள்ளது.

iStock 1165486390 e1567440679861 பேரனர்த்த காலங்களும் உள்ளூர் மருத்துவ முறைமைகளின் தேவைப்பாடும் - ச.புஸ்பலதா (கிழக்குப் பல்கலைக்கழகம்)

அந்நிய காலனித்துவ சிந்தனையானது, எமது பாரம்பரியம், பண்பாடு, பண்பாடு,வாழ்வியலுடனான உள்ளூர் மருத்துவம்,கை மருத்துவம்,பாட்டி வைத்தியம் மற்றும் மூலிகை மருத்துவம் ஆகியவற்றினை தரமற்றவை, தரமற்ற மருத்துவம், சாதி சமூக நிலை சார் மருத்துவம்  என பாகுப்படுத்தி தரமிழக்கச் செய்துள்ளதோடு உள்ளூர் மருத்துவத்தினை  வணிக நோக்காகவும் நுகர்வு பொருளாகவும் மாற்றியமைத்தது.

இருந்தும் உள்ளூர் மருத்துவமானது மரபு ரீயாக ஒரு சந்ததியினரிடம் இருந்து கற்று அடுத்த சந்ததியினர் பார்த்து  செயல்முறையாக கற்றுக் கொண்டு காலம் காலமாக வளர்ந்து வந்ததுடன் இன்று அனைவரையும் உள்ளூர் மருத்துவம், கை வைத்தியம், பாட்டி வைத்தியம் மற்றும் மூலிகை மருத்துவத்தின் முக்கியத்துவத்தினை திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது.

உலகில் எங்கே தொற்று நோயினால் இறந்துவிடுவோமோ? என்ற பயத்தில்  உள்ளூர் மருத்துவத்தினை தேடி ஓடுகின்றோம். சிறிய காயத்திற்கு கூட ஆங்கில மருத்துவத்தில் தஞ்சமடைந்து கிடந்த மனிதர் தற்போது பெருங்காயம், மஞ்சல்,கொத்தமல்லி, வேப்பம் இலை என மூலிகைகளைத் தேடி அலைகின்றனர்.fig 2 பேரனர்த்த காலங்களும் உள்ளூர் மருத்துவ முறைமைகளின் தேவைப்பாடும் - ச.புஸ்பலதா (கிழக்குப் பல்கலைக்கழகம்)

காலனிய ஆதிக்கத்தின் பின் மேற்கத்தய நாடுகள் அறிமுகப்படுத்திய உணவே நாகரீகம் ஆடம்பரம் என எண்ணி இருந்தனர் ஆனால் இப்பொழுது நோய் எதிர்ப்பு சக்தியினை வளர்த்துக்கொள்ள உள்ளூர் மருத்துவம் சார் உணவுகளையும் மூலிகை இலை வகையினையும் தேடி திரிந்து வாங்கி உண்ணுகின்றனர்.

உள்ளூர் மருத்துவம், கை மருத்துவம்,பாட்டி வைத்தியம் மற்றும் மூலிகை மருத்துவத்தின்   தேவையினையும் உணவு, உபசரிப்பு மற்றும் பழக்க வழக்கத்துடனான நோயற்ற ஆரோக்கிய வாழ்க்கையினையும் நோய் எதிர்ப்பு சக்தியினையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று வீட்டில் நிற்க நேரம் இல்லாத மனிதர் நின்று யோசிக்கின்றனர்.

நவீன மருத்துவத் துறையானது உலகினை மிஞ்சி வேற்று கிரகம் வரை சென்று கொண்டுருக்கின்ற போதும் இன்றும் எம் பெரியோர்கள் உள்ளூர் மருத்துவத்தினையும் இயற்கை மூலிகையின் அவசியத்தினையும் ஆரோக்கியமானது என அழியாது காலம் காலமாக பயின்றும் பயன்பாட்டிலும் வளர்த்து வந்துள்ளனர்.

உள்ளுர் மருத்துவம்  இருந்ததினாலும் இப்பொழுது இருப்பதாலும் தேடி திரிகின்றோம் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்துக் கொள்வதற்கு. முற்காலத்தில் கூட்டாக வாழ்வதே ஆரோக்கிய வாழ்வு என்ற நிலை மாறி இன்று தனித்தும்,தம்மை தாமே தனிமைப்படுத்தி கொண்டு தொற்றுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள வீடுகளில் முடங்கி வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.Banana Leaf original பேரனர்த்த காலங்களும் உள்ளூர் மருத்துவ முறைமைகளின் தேவைப்பாடும் - ச.புஸ்பலதா (கிழக்குப் பல்கலைக்கழகம்)

உள்ளூர் மருத்துவத்தினையும் இயற்கை மூலிகையினையும் கையாண்டு வந்த சமூகத்திடம் எந்த விதமான  கொடிய வகையான நோய்களோ தொற்றுக்களோ தாக்கவில்லை. தாண்டி தாக்கிய போதும் எமது முன்னோர்கள் தாக்கத்திற்கு முகம் கொடுக்க உள்ளூர் மருத்துவ முறையினை கையாண்டுள்ளதோடு நோய்களினையும் குணப்படுத்தியுள்ளனர்.

பாரம்பரியமாக பின்பற்றி வரும் உள்ளூர் மருத்துவமானது இயற்கையுடனும் வாழ்வியலுடனும் இணைந்து காணப்பட்டதுடன் உணவு உபசரிப்பு மற்றும் பழக்கவழக்கத்துடன் உள்ளூர் மருத்துவ முறையானது அதிகம் அதிகமாக பயன்பாட்டில் இருந்தது.

எனவே இன்று உள்ளூர் அறிவு திறன், உள்ளூர் மருத்துவம்  என்பன ஆய்வுகளுக்கும் கற்கை முறைக்கும் மாத்திரமின்றி பிரயோகித்தல்,கற்றல் நடைமுறையில் மீள் உருவாக்கப்பட்டு உள்ளூர் மருத்துவத்தில் பயன் அடைய வேண்டும்.

காலனிய நீக்க சிந்தனையுடன்  கேள்விக்கு உட்படுத்தல் மற்றும் அறிவு பூர்வமான  சிந்தனை செயல்பாடுகளுக்கு ஏற்ப உள்ளூர் மருத்துவம், மூலிகை மருத்துவம் மற்றும் கை வைத்தியத்தினை கற்றல் கற்பித்தல் செயற்படுத்தல் என மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை அதிகம் உருவாகி வருகின்றது.

ச.புஸ்பலதா (கிழக்குப் பல்கலைக்கழகம்)

 

 

கொரோனா வைரஸ்: உலக தலைவர்களின் சர்ச்சைக் கருத்துக்களும் ,வேடிக்கைப் பேச்சுகளும்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இந்த நோயை முற்றிலும் ஒழிக்க உலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

ஆனால் இதே காலகட்டத்தில் கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்துப் பேசும் உலகத் தலைவர்கள் சிலர் சில நேரங்களில் பொருத்தமற்ற கருத்துகளைப் பேசுகின்றனர், பொருத்தமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

மேலும் வைரஸ் குறித்து சில தவறான தகவல்களையும் அவர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களில் சில தலைவர்கள் இந்த உலகளாவிய தொற்றை அணுகும் முறை மாறியுள்ளது. எடுத்துக்காட்டாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொள்ளும் அணுகுமுறையைக் கூறலாம். ஆனால் இன்னும் சிலர் தங்கள் எதிர்மறையான, ஆபத்தான நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளவே இல்லை.

இப்படி உலகத் தலைவர்கள் சிலர் கொரோனா பற்றிப் பேசிய சர்ச்சையான மற்றும் தவறான கருத்துகளின் தொகுப்பு இது.

”நாங்கள் வைரசை கட்டுக்குள் வைத்துள்ளோம்”

அமெரிக்காவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்து இரண்டு நாட்களுக்கு பிறகு ஜனவரி 22ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்று குறித்து சி.என்.பி.சி செய்திக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறினார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இப்போது உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா இருக்கிறது. ஏப்ரல் 7ம் தேதி நிலவரப்படி அமெரிக்காவில் மட்டும் 3,68,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

இதுவரை இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் மருத்துவ உபகரணங்களும் போதிய எண்ணிக்கையில் இல்லை. அங்கு மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2,50,000ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

”இது சாதாரண பறவைக்காய்ச்சல் போன்றது”

பிரேசில் பிரதமர் சயிர் போல்சனாரூ பல சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இந்த தொற்று குறித்து அவர் கூறிய கருத்துகளால் பலர் சாலைகளுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனது உரையின்போது கொரோனா வைரசின் அபாயங்களை குறைத்துமதிப்பிட்டதோடு, சமூக இடைவெளி குறித்து அவர் கருத்துகளை மிகவும் தைரியமாக முன்வைப்பதுபோல காட்டிக்கொண்டார்.

பிரேசிலில் உள்ள மாகாண ஆளுநர்கள் தங்கள் மாகாணத்தை முடக்க முயற்சித்து வெளியிடும் அறிக்கைகளுக்கு எதிராகவும் இவர் அழுத்தம் கொடுக்கிறார். பிரேசில் சுகாதாரத்துறை அளித்த தகவலின் படி கடந்த வாரம் நான்கே நாட்களின் அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7000ஐக் கடந்துள்ளது.

”உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு பதிலாக உங்களை புதைத்து விடுகிறேன்”

ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ தனது நாட்டு மக்களிடம் இந்த மிரட்டலை விடுத்தார். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நாட்டை காப்பாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரோட்ரிகோ டுடெர்டே மேற்கொண்டார். நாட்டை முடக்குதல், சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு என பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால்உணவுப் பற்றாக்குறையால் அங்கு போராட்டம் நடைபெற்றது.

விதியை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்துவர் என்று அதிபர் அப்போது எச்சரித்தார்.

”அரசாங்கத்தை மிரட்ட வேண்டாம். அரசாங்கத்திற்கு சவால் விடாதீர்கள். நீங்கள் தோற்று விடுவீர்கள்,” என்று ஏப்ரல் 2ம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார் அவர்.

பிலிப்பைன்ஸில் 2,300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

”இங்குவைரஸ்பறப்பதைநீங்கள்பார்த்தீர்களா? இங்குவைரஸ்எதுவும்இல்லை”

பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லூக்காஷென்கோ மற்றவர்கள் புருவத்தை உயர்த்தும் அளவிற்கு கொரோனா பாதிப்பை வேடிக்கையாக கையாண்டார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முயற்சிக்க வேண்டும் என்ற ஆலோசனையை கேட்டு சிரித்தபடியே ”வைரஸ் இங்கு சுற்றி திரிவதை என்னால் பார்க்க முடியவில்லை” என்றுகூறினார். உள்ளரங்கில் நடைபெற்ற ஹாக்கி போட்டியை கண்டவாறு தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த அரங்கில் உள்ள மக்கள் அனைவரும் குளுமையில் இருப்பதால் அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள், அவர்களை வைரஸ் தாக்காது என்று கூறினார்.

வைரஸ் குறித்த அச்சங்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், இது “ஒரு மனநோயைத் தவிர வேறொன்றுமில்லை” என்று விவரித்தார். ஓட்கா உள்ளிட்ட சில மதுபானங்கள் நம்மை வைரஸ் பாதிப்பில் இருந்து காப்பாற்றும் எனவும் அவர் கூறினார். பிறகு அவரே இந்த கருத்துகள் கேலியானவை என்று கூறி பின்வாங்கினார்.

ஐரோப்பாவில் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட நாடு பெலாரஸ். இங்கு 150க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘உங்கள் குடும்பதினரை சாப்பிட வெளியே அழைத்துச் செல்லுங்கள்’

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல், கோவிட்-19 வைரஸ் பரவுவது குறித்து பொது சுகாதார துறை அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் தொடர்ந்து முரண்பட்டார்.

மேலும் பரவிவரும் வைரஸ் பாதிப்பை பொருட்படுத்தாமல் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, அவர் சந்தித்த சில குழந்தைகளுக்கு முத்தமும் தந்தார்.

அமெரிக்கா போல மெக்சிகோவில் இது வரை பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் மெக்சிகோவில் 7,00,000 பேர் வைரசால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மார்ச் 30ம்தேதி மெக்சிகோவில் சுகாதார அவரச நிலை அறிவிக்கப்பட்டாலும், 50 பேர் வரை கூடும் பொதுக்கூட்டங்கள் இன்னும் நடைபெற்றுதான் வருகின்றன.

”தடைகள் விதித்த நாடுகளை தண்டிக்க இறைவன் கொரோனா வைரசை படைத்துள்ளார்”

ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் முனங்காக்வா சர்ச்சையான கருத்து எதையும் கூறவில்லை. ஆனால் தமது அமைச்சர் ஒருவர் கூறிய கருத்தை அவர் சமாளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

தங்கள் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதித்த மேற்கத்திய நாடுகளை கடவுள் கொரோனா வைரஸ் மூலம் பழிவாங்குவதாக ஜிம்பாப்வே பாதுகாப்பு அமைச்சர் ஒப்பா முச்சின்குரி கூறிய கருத்தை மறுத்து முனங்காக்வா கருத்துத் தெரிவித்தார்.

“இந்த மாதிரியான வைரஸ் தொற்றுக்கு விஞ்ஞான விளக்கங்கள் உள்ளன, வைரசுக்கு எல்லைகள் இல்லை, மற்ற இயற்கை நிகழ்வுகளைப் போல இதற்காகவும் யாரையும் குறை சொல்ல முடியாது” என்று எமர்சன் முனங்காக்வா கூறினார்.

போதிய மருத்தவ வசதிகள் இல்லாத வறுமை மிக்க நாடு இது என்பதால், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தால் இங்கே அதிகம் பாதிப்பு இருக்கும் என்று அச்சம் நிலவுகிறது.

”அமெரிக்காவிற்கு எதிரானவர்களையே இந்த வைரஸ் அதிகம் பாதித்துள்ளது”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் எதிரிகளிடையே கொரோனா வைரஸை பரப்பியதாக செல்வாக்குமிக்க இராக்கின் ஷியா பிரிவு மதகுரு முக்தாதா அல் சதர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தவிர இன்னும் நிறைய சர்ச்சைகளுக்கு முக்தாதா அல் சதர் காரணமாகிவிட்டார்.

சமீபத்தில் வாரங்களில், இராக் அதிகாரிகள் வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை விட்டுவிட்டு, தொடர்ந்து பெரிய அளவில் பிரார்த்தனை கூட்டங்களை நடத்தும் படி இவர் அறிவுறுத்தினார்.

இது தவிர ஒரு பாலினத்தவர்கள் திருமணம் செய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பிய நாடுகளே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இவர் கூறினார். எடுத்துக்காட்டாக சீனா மற்றும் இத்தாலியை இவர் சுட்டிக்காட்டினார். எனவே இந்த சட்டத்தை நிராகரிக்க அனைவரும் முன்வரவேண்டும் என்றும் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி இராக்கில் கொரோனா வைரசால் நிறைய உயிரிழப்புகள் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

நாட்டில் கோவிட் -19 பாதிப்புகள் குறித்த தகவல்களை வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியதாக இந்தோனீசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, ஒப்புக்கொள்கிறார். மக்கள் பீதி அடைந்து உணவுப்பொருட்கள் மற்றும் தேவையான பொருட்களை வாங்க அதிகம் நடமாட ஆரம்பிப்பார்கள் என்பதால் அமைதி காத்ததாக கூறுகிறார்.

”வைரஸ் குறித்த சில தகவல்களை பொதுமக்களிடம் கூறி, அச்சத்தை அதிகரிக்க விரும்பவில்லை”

இந்தோனீசியாவில் மார்ச் 2ம் தேதி ஒருவர் கூட கோவிட் 19 வைரசால் பாதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது 1500ருக்கும் அதிகமானோருக்கு அங்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி அங்கு தேசிய அவசர நிலையும் அறிவிக்கப்பட்டது.

சில மூலிகை பானங்கள் இந்தோனீசிய மக்களுக்கு கொரோனா வைரசை எதிர்கொள்ளும் சக்தியை கொடுத்துள்ளது என அந்நாட்டு தேசியப் பேரிடர் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

”நோயாளிகளுக்கு நான் கை கொடுத்தேன்” – பிரிட்டன் பிரதமர்

மார்ச் 3ம் தேதி பிரிட்டனில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், ”நேற்று இரவு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, நான் கைகொடுத்தேன், கை குலுக்குவதால் தொற்று பரவும் என்ற கருத்தை பொருட்படுத்த வேண்டாம்” என்றார். ஆனால் உண்மையில் மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் மட்டுமே போரிஸ் ஜான்சன் கை குலுக்கியது தெரிய வந்தது.

மார்ச் 27ம் தேதி போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பிபிசி

வவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தவர்களை பதிவு செய்ய கோரிக்கை

வவுனியா மாவட்டத்திற்கு வருகை தந்து தமது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாதுள்ள வெளிமாவட்டத்தவர்களை பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறு வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.எம். சமன்பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டதவர்கள் தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வெளிமாவட்டங்களில் இருந்து பல்வேறு தேவைகளின் பொருட்டு பலர் வவுனியாவிற்கு வருகை தந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக தமது சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாதுள்ளனர்.

இவ்வாறானவர்கள் தமது விபரங்களை வவுனியாவில் உள்ள பிரதேச செயலகங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

இராணுவமயப்படுத்தப்பட்ட கோவிட்-19 நடவடிக்கை – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்

கோவிட் 19 இற்கான இலங்கையின் இராணுவமயப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மேற்பார்வை போதாமல் இருப்பது சில பாரதூரமான மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

“கோவிட் 19 இற்கான பதில் நடவடிக்கையினை ஜனாதிபதி இருந்த அதே இராணுவப்படையணியிலே கடமையாற்றிய இலங்கையின் போர்க் குற்றவாளி ஒருவர் தலைமை தாங்குகின்றமையானது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மேற்பார்வை செய்தல் பற்றிய கேள்விகளை எழுப்புவதாக அடைக்கப்பட்ட சூழ்நிலையில் உள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 அவசர காலநிலையைக் கையாள்வதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டம், விகிதசமம் மற்றும் பாரபட்சமின்மை போன்ற கோட்பாடுகளைக் கொண்டு வழிநடத்தப்பட வேண்டும் என நீதிக்குப்புறம்பான மற்றும் உடனடி அல்லது எழுமாற்றான கொலைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி அக்னஸ் கொலமாட் தெரிவித்துள்ளார். இவ்வாறான நெருக்கடிநிலைமையை சிவிலியன் மேற்பார்வையின்றி கையாள்வதற்கு இராணுவ
நபரை நியமித்தமையானது இலங்கைக்கோ அல்லது குறிப்பாக முஸ்லீம்களாக உள்ள கோவிட் 19 நோயாளிகளை அடையாளங்காணும் லெப் ஜெனரல் சவேந்தில சில்வாவிற்கோ சாதகமான விளைவுகளை ஏற்படுத்தப்போவதில்லை.

இராணுவம் இல்லாது, சிவில் சேவையில் அனுபவமிக்க அதிகாரி பொதுச் சுகாதாரம் மற்றும் பகிர்ந்தளிப்பு தொடர்பான சிக்கலான விடயங்களை ஒருங்கிணைப்பதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார், மக்களின் உயிர்களும் அத்துடன் சமமாக பகிர்ந்தளிக்கப்படவேண்டிய பெருந்தொகையான பணம் மற்றும் விநியோகப் பொருட்கள் என்பனவும் ஆபத்தில் உள்ளன. பொதுமக்கள் கைது செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்தப்படாமல் இந்த பதில் நடவடிக்கை பற்றி கேள்வி கேட்பதற்கு அனுமதிக்கப்படுதல் மிகவும் அவசியமானதாகும். இந்த நெருக்கடி நிலையானது சிவில் உரிமைகள் மேலும் அழிப்பதற்கான ஒரு சாட்டாக மாறிவிடக் கூடாது.

எது சிறந்த பொதுச்சுகாதார நடவடிக்கைகளாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் மருத்துவ அதிகாரிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே ஏற்கனவே மோதல்கள் உள்ளன. நாட்டினுடைய முழுமையான கோவிட்19 இற்கான பதில் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக ஒரு இராணுவத்தளபதியை அரசாங்கள் நியமித்தமை பற்றி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூட ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது.

கோவிட் 19 பரவுவதைப் தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைகள் மையம்

கோவிட் 19 வைரஸ் பரவுவதை தடுத்தல் மற்றும் கையாளுதல் மற்றும் சுகாதர விநியோகங்கள் மற்றும் ஏனைய பொதுச் சேவைகள் என்பன புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய நடவடிக்கைகள் மையத்தினால் நிர்வகிக்கப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. இந்த மையத்தில் பணி செய்யக்கூடியதாக அனைத்து ஏனைய அதிகாரிகளும் இருக்க வேண்டும்.

எவ்வாறாயினும் தேசிய நடவடிக்கைகள் மையமானது இலங்கையினுடைய
இராணுவத்தளபதியாகவும் மற்றும் பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியுமாக உள்ள லெப் ஜெனரல் சவேந்திர சிலவாவினால் தலைமை தாங்கப்படுகின்றது. கட்டளைப் பொறுப்புக்கு ஊடாக நீதிக்குப் புறம்பான கொலைகள் எனப் பெயரிடப்பட்ட பாரிய மனித உரிமைகள் மீறல்களில் அவருடைய பங்கு தொடர்பான நம்பத்தகுந்த தகவல்கள் காரணமாக அமெரிக்க வெளிநாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சில்வா அவர்கள் பகிரங்கமாகவே தடைசெய்யப்பட்டார். சில்வா அதிகாரம்வாய்ந்த இந்த கோவிட் 19 பணிக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார். கோத்தபாஜ ராஜபக்ச 1989 இல் இரண்டாவது சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியினை நசுக்குவதற்கான இராணுவ நடவடிக்கையின் போது மாத்தளையில் கஜபாகு படையணியின் முதலாவது பட்டாலியனில் இவரது உயர் அதிகாரியாக இருந்தார்,

இதன்போது இவர்களது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இந்த பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் காணாமற்போயிருந்தார்கள். அமெரிக்க அரசாங்கம் சில்வாவை போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டும் 2008 2009 காலப்பகுதியில் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்சவிடமிருந்து அவர் நேடடியாகவே கட்டளைகளைப் பெற்றுக்கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

மேலும் ஏனைய கோவிட்19 அமைப்புகளுக்கானது போல் கோவிட்19 தேசிய நடவடிக்கைகள் மையத்தினை அமைப்பதற்கு எந்த வர்த்தமானி அறிவிப்புக்களும் இருக்கவில்லை என்பதால் இறுதியாக இடம்பெற்ற இந்த நியமனத்திற்கான சட்ட ரீதியான அடிப்படைகள் தெளிவானதாக இல்லை. இது முன்னாள் இராணுவ அதிகாரியாக இருந்த அவரது நண்பரான ஜனாதிபதியினை விட சிவில் நிர்வாகத்தில் சவேந்திர சில்வாவினைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துபவர் யார் என்பது பற்றிய கேள்வியை எழுப்புகின்றது. நோய்பரவல் தொடர்பான ஊடக மாநாடுகள் சவேந்திர சில்வாவினாலே ஆதிக்கம் செலுத்தப்படுவதுடன் அவர் தனிமைப்படுத்தல் சூழ்நிலை பற்றியே விள்ளக்கமளிக்கின்றார்.

உணவு வழங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி செயலணி

இந்த நெருக்கடியின் போது நாட்டு மக்களுக்கு உணவு வழங்குவதை உறுதிப்செய்து கொள்வதற்காக மார்ச்சில் ஜனாதிபதியினால் இது வர்த்தகமானி மூலம் அறிவி;க்கப்பட்டது. இந்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையும் அதிகாரங்களும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் விநியோகிப்பதில் இருந்து சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகள் என வரையறை எல்லை மற்றும் வீச்சு என்பவற்றில் மிகவும் அதிகமானவை என மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் ஒரு விரிவான ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

இந்த செயலணியானது தேர்தலில் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்சவினால் தலைமை தாங்கப்படுவதுடன் இராணுவதால் மேற்கொள்ளப்பட்ட பரவலான சர்வதேச சட்ட மீறல்களைக் கண்ட 2009 இலங்கையின் போரில் சம்பந்தப்பட்ட ஜனாதிபதிக்கு நெருக்கமான பெரும் எண்ணிக்கையான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளையும் (அவரது கஜபாகு படையணியைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட) கொண்டுள்ளது. முக்கிய அரசாங்கப் பணிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தமையானது சர்ச்சைக்குரியதானதாகவே இருந்துள்ளது உதாரணமாக மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய சுங்கப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டமையானது சுங்க, வர்த்தக சங்கங்களால் எதிர்க்கப்பட்டதுடன் இந்தப் பதவி சிவில் நிர்வாகத்தில் எந்த அனுபவமும் இல்லாத ஒரு இராணுவ அதிகாரிக்கு போகக் கூடாது என்றும் தமது சொந்த திணைக்களத்தைச் சேர்ந்த ஒரு சிவில் அதிகாரிக்கே செல்ல வேண்டும் எனக் கூறினார்கள். ஜனாதிபதியின் செயலாளர் டீ ஜெயசுந்தர ஊழலைக் கட்டுப்படுத்தவே ஒரு இராணுவ அதிகாரியை நியமித்ததாக தெரிவித்திருந்தார்.

அதிர்ச்சிதரும்வகையில் 2008 இல் ஜெயசுந்தரவே ஒரு தனியார் கூட்டுத்தாபனத்திற்கு மிகவும் குறைவான ஒரு விலையில் வருமானம் தரும் ஒரு அரசாங்க சொத்தை சட்டத்திற்குப் புறம்பான வகையில் விற்பனை செய்தமைக்குப் பொறுப்பாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் திறைசேரியின் செயலாளர் பதவியில் இருந்து பதவி விலகவேண்டியிருந்தது ஆனால் ஒரு வருடத்தின் பின்னர் அப்போது ஜனாதிபதியாக இருந்த தற்போதைய ஜனாதிபதியின் சகோதரரான மகிந்த ராஜபக்சவினால் அந்த பதவியில் மீண்டும் அமர்த்தப்பட்டார்.

இதைவிட, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவரான ஜனாதிபதியின் கஜபாகு படைப்பிரிவினைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் னு.ஆ.ளு திசநாயக்கா (சாந்த திசநாயக்கா) கோவிட் 19 அழிவினைப் பயன்படுத்தி இலாபமீட்டிய ஒரு வர்த்தகரை நான் உன்னுடைய காதுகளை பிய்ப்பேன் என கூறி அச்சுறுத்தும் போது அண்மையில் ஒரு கமராவில் அகப்பட்டார். மேலும், 2012 இல் வெலிக்கட சிறையில் இடம்பெற்ற சம்பவம் பற்றிய விசாரணை ஆணைக்குழுவானது 27 சிறைக் கைதிகள் கொல்லப்பட்ட வெலிக்கட சிறைப் படுகொலையில் அவரது பங்கிற்காக இலங்கை தண்டனைச் சட்டத்தின் 162 ஆவது பிரிவின் கீழ் திசாநாயக்காவையும் அவருடன் கோத்தபாய ராஜபக்சவையும் குற்றஞ்சுமத்துமாறு சிபார்சு செய்தது. இருவரும் குற்றஞ்சுமத்தப்படவில்லை.

கோவிட்19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச 23 மார்சில் இந்த நிதியத்தை நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட கொடையாளிகளிடம் இருந்து நேரடி பண வைப்புக்களையும் நன்கொடைகளையும் பெற்றுக்கொள்வதற்கு உருவாக்கினார். 07 ஏப்பிரல் இல் இந்த நிதி 420 மில்லியன் இலங்கை ரூபாயினை எட்டியது (2.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள்). மேலதிக விபரங்கள் நிர்வாக இயக்குநரான திரு மு.டீ ஏகொடவெல இடமிருந்து பெய முடியும் என ஜனாதிபதியின் இணையத்தளம் கூறுகின்றது. எகொடவெல ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி அத்துடன் முன்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் அவன்ட் கிறேட் (Avant Garde) ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் ஆனால் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாக ஏற்கனவே நியமிக்கப்பட்ட பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சிவிலியன் மேற்பார்வைக்கான அழைப்புகள்

பொதுத்துறைப் பணியினை பிரதிநிதித்துவம் செய்யும் இருபது முன்னணி வர்த்தக சங்கங்கள் கோவிட்19 தடுப்பினை ஒரு சிவில் அதிகாரியின் கீழ் கொண்டுவருமாறு அழைப்பு விடுத்து ஜனாதிபதிக்கு அண்மையில் எழுதியிருந்தார்கள். 18 மார்ச் கூட்டறிக்கையில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது:

“இது போன்றதொரு தேசிய அழிவு ஏற்படும் நிலைமையில் ஒரு தேசிய நடவடிக்கை மையமானது விசேட பயிற்சியுடன் கூடிய ஒழுங்குமுறை அதிகார சபையான பேரழிவு முகாமைத்துவ மையத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து பொதுச் சேவைகளும் அந்த நிலையத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.

இதற்கிடையில் ஏப்பிரல் 04 – ஏப்பிரல் 11 சம்பவங்கள் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படும் நிலைமையை எதிர்கொள்வதற்கு தனியார் மற்றும் அரச சுகாதார சேவைகளை ஒன்றாக்குவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கீழ் பொறிமுறையொன்று இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிவரமசிங்க ஒரு வாரத்திற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

மத ரீதியான வெறுப்பு

இந்த நெருக்கடி நிலைமையானது குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக மத ரீதியான வெறுப்புணர்வை தூண்டுவிடுவதற்கு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என இலங்கையிலுள்ள பல அமைப்புக்கள் கரிசனை வெளியிட்டுள்ளன.

முஸ்லீம்களுக்கு எதிரானவை எனப் பெயர்போன பொது பல சேனா போன்ற சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புகளுக்கு கோட்டபாய ராஜபக்ச நெருக்கமானவர் என்பதன் அடிப்படையில் இந்த கரிசனை உள்ளது. 26 வர்த்தக சங்கங்களால் மேற்கொள்ளபட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளதாவது: கோரணா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றி தகவல்களை அறிவிக்கும் போது இன உணர்வுகளைத் தூண்டக்கூடிய வகையில் மக்கள் மதம் மற்றும் இன அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றார்கள் என்பது வெளிப்படை கொரணா நோயாளிகள் மற்றும் அதனால் இறந்தவர்கள் பற்றி அறிக்கைகள் மேற்கொள்ளும் அரசாங்க அதிகாரிகள், அரசாங்க அமைச்சர்கள் மற்றும் எல்லா அரசியல்வாதிகளும் இந்த பொதுகொள்கைகளை பின்பற்ற வேண்டும் என எமது வர்த்தக சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தணிக்கை

அரசாங்க அதிகாரிகளை விமர்சித்து சமூகவலைத் தளங்களில் பதிவுகளை மேற்கொள்பவர்களை கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு குற்றவியல் விசாரணைப் பிரிவினைச் சேர்ந்த பொலிசார் மற்றும் அனைத்து அதிகாரிகளையும் பிரதி பொலிஸ்மா அதிபர் விக்கிரமரத்ன அறிவுறுத்தியுள்ளார். ஏப்பிரல் 01 இல் வெளியிடப்பட்ட பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது இணையத்தளத்தில் போலியான அல்லது தீங்கிழைக்கும் அறிக்கைகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை.

இது கருத்துச் சுதந்திர உரிமையை மீறுவதாக உள்ளது என செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளர். 04 ஏப்பிரல் ஏழு ஊடக அமைப்புக்களால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை தொற்று நோய் காலப் பகுதியில் பொய் செய்திகள் அல்லது தவறான தகவல்கள் மிகவும் தீங்கானது என ஏற்றுக் கொண்டுள்ளது ஆனால் நியாயமான விமர்சனம் என்பது ஒரு உரிமை அத்துடன் அரசாங்க அதிகாரிகள் ஒரு தவறினைச் செய்தால் மக்கள் தமது கருத்துக்களை இணையத்தில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என மேலும் தெரிவித்துள்ளது. 07 ஏப்பிரலில் 46 தனிநபர்களாலும் 09 அமைப்புக்களாலும் கையொப்பமிடப்பட்டு பாதுகாப்பு செயலாளருக்கு பிரதி இடப்பட்டு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வதற்கு அதிகாரமளிக்கும் சரத்துக்கள் எதுவும் சட்டத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அச்சமும் குழப்பமும் கொண்ட முன்னொருபோதும் இல்லாத இந்தக் காலப் பகுதியில் பல அரசாங்கங்கள் உரிமைகளை அடிப்படையாக கொண்ட ஒரு பதில் நடவடிக்கை என்பதை விட கோவிட்19 நெருக்கடிக்கு ஒரு பொதுவான அவசரகால நடவடிக்கை ஒன்றினை ஆராய்வதில் கவனம் செலுத்துகின்றன. உரிமைகளை அடிப்படையாக கொண்ட ஒரு அணுகுமுறைக்கு மனித உரிமைகள் மற்றும் சட்ட ஆட்சியினை முன்னிலைப்படுத்தும் ஒரு கட்டமைப்பு அவசியமாகும்,

என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீதான ஒவ்வொரு கட்டுப்பாடும் மக்கள் எந்தச் சட்டத்தின் கீழ் தமது உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன அத்துடன் சரியாக தாம் என்ன செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றோம் (மற்றும் அனுமதிக்கப்படவில்லை) என்பதனை தெரியப்படுத்தக் கூடியதாக குறிப்பிட்ட சொற்பதற்களில் விபரிக்கப்பட்ட ஒரு தெளிவான சட்ட அடிப்படையைக் கொண்டது. மட்டுப்படுத்தல் அல்லது கட்டுப்பாடு நீதிமன்றங்களின் மீள்பார்வைக்கே உட்படுத்தப்பட வேண்டும், என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் சிவில், கட்சி சாரா சுயாதீனமான ஒரு பதில் நடவடிக்கை ஆணைக்குழுவினை அமைக்குமாறும், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு தாம் விரும்பும் எதையும் செய்வதற்கு இராணுவம் மற்றும் பொலிசார் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் நாம் இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்புவிடுக்கின்றோம். விசேடமாக ஏற்கனவே மதிப்பிழந்த அதிகாரிகளின் கள்ளத்தனமான நடவடிக்கைகள் மூலம் இராணுவக்கட்டுப்பாட்டை அமுல்ப்படுத்த கோவிட்19 இனை ஒரு சாட்டாக பயன்படுத்தக்கூடாது, என சூக்கா கருத்து தெரிவித்துள்ளார்.

முற்றும்

அறிக்கையை பார்வையிட இங்கு அழுத்தவும்:

சர்வதே உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்ட அறிக்கை

எழுவர் விடுதலை தொடர்பாக 57பேர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தினால், ராஜீவ் கொலைத் தண்டனைக் கைதிகளை பரோலில் அல்லது பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்று 57பேர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

கி. வீரமணி, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கு.இராமகிருஸ்ணன், வேல்முருகன் உட்பட 57பேர் இணைந்து விடுத்திருக்கும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழக அரசே கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலக நாடுகள் கடுமையான பொருளாதார, சுகாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மிக விரைவாக கொரோனா பாதிப்பு பரவிக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தனி நபரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. இல்லையென்றால் கொரோனா தொற்று எளிதில் பரவும் என அறிவித்துள்ளது. மேலும் உடல் பலவீனமாக உள்ளவர்களை இந்த வைரஸ் விரைவாக தொற்றி உயிரிழப்பில் கொண்டு போய் விடும் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இது இடநெருக்கடியில் வாடும் சிறையாளர்களைக் கடுமையான நெருக்கடிக்கு தள்ளிக் கொண்டிருக்கின்றது. சில நாடுகளில் சிறையாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் கூட்டமாக இருப்பதால், அங்கும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் சிறைக் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகளாக உள்ளவர்களை பரோலிலோ அல்லது பிணையிலோ விடுவிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். கடந்த ஆண்டே உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியதன் அடிப்படையில் தமிழக அரசு ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருக்கின்றது. இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அவர்களுக்கு நீண்ட நாள் பரோல் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீண்ட காலமாக சிறையில் வாடும் கைதிகளுக்கு சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான தொற்று நோய் இருப்பதால் அவர்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது. இது அவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் தமிழக சிறைகளில் கைதிகள் மிகவும் இடநெருக்கடியில் தான் இருந்து வருகின்றனர். சுகாதாரம் இல்லாமலும் மருத்துவமனை வசதிகளும் இல்லாமல் தான் இருந்து வருகின்றனர்.

எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் 7தமிழர் உள்ளிட்ட அரசியல் கைதிகளையும் இஸ்லாமிய சிறைக் கைதிகள் மற்றும் அரசியல் சிறைக் கைதிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படிக்கு

கி.வீரமணி, பழ.நெடுமாறன் உட்பட 57 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸிற்கு எதிரான சுதேச வைத்திய முறைகள் குறித்து ஆராய்வு இராணுவத் தளபதி

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக சுதேச வைத்திய முறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக தேசிய மருத்துவ வைத்தியர்களுக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ராஜகிரியவில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு தேசிய மையத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தேசிய மருத்துவத்துறை மருந்துகளும், சுதேச மரு்துவத்துறை மருந்துகளும் கொரோனாவை கட்டுப்படுத்தும் என்பது குறித்து ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் சுமார் 50 சுதேச வைத்தியத்துறை வைத்தியர்கள் கலந்து கொண்டதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 200.46 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 5194 பேர் மட்டுமே பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5194ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.இவர்களில் 401 பேர் குணமடைந்துள்ளனர், 149 பேர் மரணமடைந்துள்ளார் மற்றும் 4643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரங்களில் மட்டும் 773 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது மற்றும் 35 பேர் மரணமடைந்துள்ளார் என்று இன்று காலை சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரி
கொரோனா பரவல் இந்தியாவில் தொடங்கியபின் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் அதிகபட்ச மரணங்கள் நிகழ்ந்தது இதுதான்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 1018ஆக உள்ளது. 690 மற்றும் 576 எனும் எண்ணிக்கையுடன் தமிழகம் மற்றும் டெல்லி ஆகியவை இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன.