Home Blog Page 1882

முல்லைத்தீவில் படையினருக்கான தனிமைப்படுத்தல் மையங்கள்-மக்கள் எதிர்ப்பு

விடுமுறைக்கு சென்று வருகின்ற இராணுவத்தினரை தனிமைப் படுத்துவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் அமைந்திருக்கின்ற பாடசாலை வளாகத்தில் ஒரு முகாமும் அதேபோன்று பிலவுக்குடியிருப்பு பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்களுடைய காணிகளில் இருக்கின்ற பொது கட்டடத்தில் இன்னொரு முகாமும் தெரிவுசெய்து விடுமுறையில் சென்ற இராணுவத்தினர் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுமுறையில் சென்று வருகின்ற இராணுவத்தினரை 14 நாட்கள் தனிமை படுத்துகின்ற நடவடிக்கை நேற்று முந்தினம் (05-04-2020) முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக மாதிரி கிராமத்தைப் பொறுத்த அளவில் மிக நெருக்கமாக மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் அந்த இடத்தில் இவ்வாறாக நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கலாம் அல்லது ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் விடுமுறையில் சென்று வருகின்ற இராணுவத்தினரை தனிமைப்படுத்த அந்த முகாமை அந்த பகுதியில் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் நேற்று முந்தினம் (05-04-2020) இராணுவத்தினர் கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மக்கள் குறித்த நடவடிக்கை மிகவும் அவசியமானது எமது மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் தொற்று ஏற்படவில்லை இருப்பினும் எவ்வளவே இராணுவ முகாம்கள் உள்ளன அதனைவிட கேப்பாபுலவு விமானப்படை முகாமில் காட்டு பகுதியில் அண்மையில் இந்தியாவில் இருந்து வந்த 203 பேர் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று(06-04-2020) விடுவிக்கப்பட்டனர் அவ்வாறான இடங்கள் இருக்கும் போது ஏன் மக்கள் செறிந்துவாழும் பகுதியில் இவற்றை அமைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியதோடு குறித்த செயலுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மக்களின் பட்டினி நிலைமை பற்றி கண்டுகொள்ளாத அரசாங்கம்-யோகேஸ்வரன்

அரசாங்கம் தேர்தலை மையப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுக்கின்றதே தவிர கொரனா அச்சுறுத்தலினால் ஏற்படும் பட்டினை சாவை தடுப்பதற்கான திட்டங்களை முன்னெடுப்பதாகயில்லையென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் விசேட நிவாரண திட்டத்தினை அமுல்படுத்திவிட்டே ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

கொரனா அச்சுறுத்தல் காரணமாக ஜனாதிபதியினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இந்தவேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்வோர் தமது தொழிலை இழந்துள்ளனர்.ஊரடங்கினை அமுல்படுத்தியுள்ள அரசாங்கம் பெருமளவான மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.சமுர்த்த உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணமானது சமுர்த்தி பயனாளிகளின் கணக்கில் உள்ள நிதியிலேயே வழங்கப்படுகின்றது.

இந்த கொரனா காலத்தில் விசேட நிகழ்வாரண உதவிகளை வழங்கியதா என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது.சதொச மூலமாக மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதாக கூறுகின்றது,ஆனால் களுவாஞ்சிகுடி,கொக்கட்டிச்சோலை பகுதிகளில் இருந்த சதோசவினை மூடிவிட்டார்கள்.இருக்கும் சதோசவில் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவுசெய்யமுடியாதயுள்ளது.

அரசாங்கம் குறைந்த விலையில் பலநோக்கு சங்க வர்த்தக நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும்.அரசாங்கம் சொல்வதை செய்வதாக இல்லை.

இந்த அரசாங்கம் தேர்தலை மையப்படுத்தியதாக செயற்படுகின்றதே தவிர கொரனாவினால் தொழில் இழந்த மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் திட்டமிடுவதாக இல்லை.அவ்வாறானால் அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் விசேடமான நிவாரணத்தினை வழங்கிவிட்டு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தவேண்டும்.ஊரடங்கு சட்டமானது கட்டாயம் அமுல்படுத்தவேண்டும்.அதற்காக மக்களின் அன்றாட தேவையினை உதாசீனம் செய்யமுடியாது.

சாதாரண கூலித்தொழில் செய்வோர்,பெண் தலைமை தாங்கும் குடும்பத்தினர்,விசேட தேவையுடையவர்கள் கிராம புறங்களில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.தொண்டர் அமைப்புகள் வழங்கும் நிவாரணங்களையே பிரதேச செயலகங்கள் மக்களுக்கு வழங்குகின்றன.

அரச நிவாரணங்கள் மக்களுக்கு சென்றடையவில்லை.ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்கால மக்களின் பட்டினி சாவுக்கு வழிவகுக்காமல் அவர்களுக்கான நிவாரணங்களை வழங்கமுன்வரவேண்டும்

முல்லைத்தீவு-நாயாறு விகாரையில் வேலைசெய்த நபர் திடீர் மரணம்.

முல்லைத்தீவு-நாயாறு குருகந்த ரஜமஹா விகாரையில் தங்கியிருந்த நபரொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த இளைஞரின் திடீர் மரணம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவர் நீண்ட காலமாக குறித்த விகாரையில் தங்கியிருந்ததாகவும், இவர் அங்குள்ள பிக்குகளுக்கு சேவை செய்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் விசித்திரமான காலநிலை.

சப்ரகமுவ, ஊவா, மத்திய, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. வத்தளை, ஹுனுப்பிட்டிய, புட்டுபாகல, கினிகத்தேனை, ரம்புக்பொத்த, மெதவெல, கிரிவெல்கொட, நெவுகல மற்றும் கோமாரி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.12 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

மழை நிலைமை: மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகளில் கிழக்கு முதல் தென்கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது சாதாரண முதல் மிதமான கொந்தளிப்பாகக் காணப்படும்.

அனுமதி பத்திரம் ஏப்ரல் 30 வரையில்.

ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் வழங்கும் புதிய முறையை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – உலகில் 81,887 பேர் பலி

கொரோனா வைரசின் தாக்கத்தினால் மேற்குலக நாடுகள் அதிக பாதிப்புக்களை சந்தித்து வருவதுடன், இதுவரையில் 81,887 பேர் பலியாகியுள்ளதுடன், 1,423,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 301,707 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்:

இந்தாலி – 17,127

ஸ்பெயின் – 14,045

அமெரிக்கா – 12,746

பிரான்ஸ் – 10,328

பிரித்தானியா – 6,159

ஈரான் – 3,872

சீனா – 3,331

நெதர்லாந்து – 2,101

ஜேர்மனி – 2,016

பெல்ஜியம் – 2,035

சுவிற்சலாந்து – 821

கனடா – 377

இந்தியா – 150

சீனா வூகன் மாநிலம் மீதான தடை அகற்றம்

கொரோனா வைரசின் தாக்கத்தை தொடர்ந்து சீனாசின் வூகன் மாநிலம் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் இன்று (07) முதல் விலக்கப்பட்டு மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 எனப்படும் வைரஸ் இந்த மாநிலத்தில் தான் ஆரம்பமாகியிருந்தது. எனினும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் சீனா தற்போது அங்கு நோயை கட்டுப்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்த மாநிலத்தின் மீது போடப்பட்ட தடைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொடர்பான இறப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை.

உலக சுகாதார நிறுவனம் மீது டிறம்ப் பாச்சல் – அமெரிக்காவில் இறப்பு அதிகரிப்பு

உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும், கொ-ரோனா வைரஸ் நோயின் ஆரம்பத்தில் அது தவறான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்ப் இன்று (07) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்திற்கு வருடம்தோறும் 58 மில்லியன் டொலர்களை அமெரிக்கா வழங்கிவருவதாகவும், அதனை அமெரிக்கா நிறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர், கோவிட்-19 வைரசின் தாக்கத்திற்கு அமெரிக்காவில் வசிக்கும் ஆபிரிக்க இனத்தவரே அதிகம் பாதிக்கப்படுவதுடன் இறப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை ஆபிரிக்க மக்களிடம் நீரழிவு, ஆஸ்த்துமா, உயர் குருதி அழுத்தம் ஆகிய நோய்கள் இருப்பதால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் தொற்றுநோய் தொடர்பான அதிகாரி கலாநிதி அந்தோனி போசி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இன்று அங்கு 1500 இற்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். இதுவரை அங்கு 12,746 பேர் மரணமடைந்துள்ளதுடன், 395,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் கோவிட் -19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் மரணம்

திலகன் என அழைக்கப்படும் 74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே இந்நோய்த் தொற்றில் மரணமடைந்த தமிழ் வைத்தியராவார்.

இங்கிலாந்தில் Kingston வைத்தியசாலையின் ஆலோசகராக கடமையாற்றி இளைப்பாறிய இவர் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மீண்டும் தன்னார்வ தொண்டர் வைத்தியராக பணியில் இணைந்து சேவையாற்றுகையில் கொரொணா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.

சில வாரங்கள் கொரோனா வைரஸ் நோயளர்களுக்கு தன்னலம் கருதாமல் ஓய்வின்றி சிகிச்சையளித்து வந்த இவரும் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 183 பேராக உயர்வு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 183 பேராக உயர்வடைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை 180 ஆக இருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது மக்கள் அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக பொது மருத்துவமனைகளை நாடுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேபோன்று சுகாதார அமைச்சின் சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.