Home Blog Page 2354

மேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் நலன்சார் அரசியலுக்குள் சிக்கியுள்ளது. போர் நிறைவடைந்த பின்னர் ஜெனீவாவில் இடம்பெற்ற சம்பவங்களின் ஒரு சில பகுதிகளை ஆய்வு செய்வதன் மூலம் அதனை நாம் தெரிந்துகொள்ளலாம்.

போர் நிறைவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ,நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 17 ஆவது கூட்டத்தொடரை இந்திய அரசின் உதவியுடன் சிறீலங்கா அரசு முறியடித்திருந்தது. அது மட்டுமல்லாது சிறீலங்காவை பாராட்டும் நிகழ்வாகவே அது அமைந்திருந்தது. ஆனால் 18 ஆவது கூட்டத்தொடரை கட்டுப்படுத்தும் நிலையை இந்திய அரசு சற்றே தளர்த்தியிருந்தது.

சிறீலங்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் வலுவடைந்துவந்த பிணைப்புக்கள், சிறீலங்காவுக்காக தமிழகத்தை இழக்கும் நிலைக்கு இந்திய காங்கிரஸ் தள்ளப்பட்டதும் இந்தியாவின் அந்த பின்னடிப்புக்கான காரணம். அதனை சரிசெய்வதற்கு இந்திய, இலங்கை கடற்படையினரின் கூட்டுப் போர் ஒத்திகைக்கு சிறீலங்கா ஒத்துறைப்புக்களை வழங்கியிருந்தது. போர் நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற கடல் ஒத்திகைகளில் அதுவே மிகப்பெரிய ஒத்திகை.

2010 ஆம் ஆண்டளவில் திருமலைத்துறைமுகத்தில் கடற்காகம் என்ற முப்படை சிறப்பு கடல் ஒத்திகையை சீனாவின் ஆதாவுடன் சிறீலங்கா அரசு மேற்கொண்டுடிருந்த நிலையில் ஐந்து நாள் கடல் ஒத்திகை ஒன்றை இந்தியா மேற்கொண்டிருந்தது.

மேற்குலகின் அன்றைய நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக இந்தியாவை அனுசரிக்க வேண்டிய நிலைக்கு மகிந்த ராஜபக்சா அரசு தள்ளப்பட்டிருந்தது. அதாவது அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக் இன் வருகையை முன்னிட்டு சிறீலங்காவின் கையை முறுக்கி அந்த கடல் ஒத்திகைக்கு இணங்க வைத்திருந்தது இந்தியா.

அமெரிக்கா உள்நுளைவதும், சீனா உள் நுளைவதும் தனக்கு ஆபத்தானது என இந்தியா கருதுகின்றது. 1987 ஆம் ஆண்டு சிறீலங்காவுடன் அவசர அவசரமாக இந்தியா மேற்கொண்ட செல்லுபடியாகாத ஒப்பந்தம் கூட மேற்குலகத்தின் உள்நுளைவதை தடுப்பதாற்காகவே மேற்கொள்ளப்பட்டது.

Blake tweeting மேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்ஆனால் சிறீலங்கா அரசை பணியவைக்கும் முயற்சிகளை அமெரிக்காவும் சீனாவும் வேறுபட்ட தளங்களில் அணுகியிருந்தன. நிதி மற்றும் படைத்துறை ஒத்துறைப்புக்கள் என்ற தளத்தை சீனா எடுத்துக்கொண்டது, மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் என்ற தளத்தை அமெரிக்கா எடுத்துக்கொண்டது. எனவே தான் 2011 ஆம் ஆண்டு ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியதும், அதற்கு தேவையான அனுசரணைகளை வழங்கி சிறீலங்கா அரசு மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி அதனைக் காரணம் காட்டி பேரம்பேசும் நோக்கத்துடன் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக் சிறீலங்காவுக்கு வருகை தந்திருந்தார்.

பிளேக்கைப் பொறுத்தவரையில் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையிலும் சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக பயணியாற்றியவர். அதாவது சிறீலங்கா மேற்கொண்ட போருக்கு முழு ஆதரவை வழங்கி தமிழ் மக்களின் அழிவுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த மனிதர். அது தான் அவருக்கான அறிமுகம்.

பிளேக்கின் நகர்வுக்கு அமைவாக அன்றைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனும் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியிருந்தார். அன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் போது சிறீலங்கா விவகாரம் அதன் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருக்கவில்லை. எனவே சிறீலங்கா அரசு தன்னை சுதாகரித்துக் கொள்வதற்கு முன்னராக ஐ.நா அறிக்கை அங்கு அனுப்பப்பட்ட விடயம் சிறீலங்கா அரச தரைப்பை அதிர்ச்சிக்குள் தள்ளியிருந்தது.

எனினும் சிறீலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பித்த இராணுவ அறிக்கையை நவநீதம்பிள்ளைக்கு அனுப்பும் பணியை ஐ.நா செயலாளர் நாயகத்தின் அன்றைய சிறப்பு ஆலோசகர் விஜய் நம்பியார் மேற்கொண்டது சிறீலங்கா அரசுக்கு சிறு ஆறுதலை கொடுத்ததுடன் இந்தியா மீண்டும் சிறீலங்காவை காப்பாற்றியிருந்தது.

அதேசமயம் சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜக்சாவை தனிமையில் சந்தித்த பிளேக், ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தொடரில் சிறீலங்கா மீது தீர்மானங்கள் கொண்டுவரப்படாமாட்டாது என்ற உறுதிகளை வழங்கியதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

அது மட்டுமல்லாது சிறீலங்கா அரசுடன் பேச்சுக்களை முறித்துக்கொண்டு வெளியேறிய தமிழத் தேசியக் கூட்டமைப்பையும் சிறீலங்காவுடன் மீண்டும் பேசி காலத்தை இழுத்தடிக்கும் நகர்வுக்குள் பிளேக் பலவந்தமாக தள்ளியிருந்தார். தமிழத் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அமெரிக்காவையோ, இந்தியாவையே எதிர்த்து தமது வாதங்களை முன்வைக்கும் உறுதியான நிலையில் அவர்கள் என்றுமே இருந்ததில்லை.

ஒருபுறம் மகிந்தாவை சமாதானப்படுத்தும் நடவடிக்கையை பிளேக் மேற்கொள்ள, மறுபுறம் சிறீலங்கா மீது ஒரு தீர்மானத்தை கொண்டுவரும் நடவடிக்கைகளை அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா 2011 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்தது. அதனை கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்ட் மேற்கொணடிருந்தார். ஆனால் அதற்கு போதிய காலஅவகாசம் அப்போது இருக்கவில்லை. பின்னர் 2012 ஆம் ஆண்டு கனடா பிரதமர் காப்பர் மற்றுமொரு முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

தனது நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டும் முயற்சியாக பல நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விருந்துபசார நிகழ்வை மேற்கொண்ட கனடாவுக்கான ஐ.நா பிரதிநிதிகள் அந்த நிகழ்வில் சிறீலங்கா மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விளக்கங்களை அளித்து தமது தீர்மானத்திற்கான ஆதரவையும் கோரியிருந்தனர்.

ஆனால் அவை யாவும் சிறீலங்காவை மிரட்டப் பயன்படுத்தப்பட்டதே தவிர, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக அல்ல என்பதை காலம் நமக்கு தற்போது உணர்த்தியுள்ளது.

ஏனெனில் அதே கனடா தான் தற்போது சிறீலங்கா கேட்காமலே அதற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தை வழங்கியுள்ளது. அதற்கான காரணம் அமெரிக்காவுக்கு சார்பான அரசு ஒன்று சிறீலங்காவில் அமைந்துள்ளதேயாகும்.

un head மேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்தற்போது சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா மீது அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கும் ரணில் அரசை காப்பாறறும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கையே தவிர அதில் தமிழ் மக்கள் மகிழ்ச்சி கொள்வதற்கான காரணங்கள் எதுவுமில்லை.

அதாவது இது ஒரு பேரம்பேசும் அரசியல் அழுத்தம். 2011 ஆம் ஆண்டு ஜெனீவா தீர்மானங்களை பேரம்பேசும் பொருளாகப் பாவித்து அன்றைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவுடன் பேரபேச முற்பட்ட பிளேக்கின் செயற்பாட்டிறிகும் தற்போதைய வழக்கிற்கும் அதிக வேறுபாட்டை காணமுடியாது.

அதாவது இந்த நாடுகளின் நலன்சார்ந்த அரசியலில் தான் தமிழ் மக்களின் உரிமைகளும், அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியும் தங்கியுள்ளது. இந்த நலன்சார் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் மேற்குலகத்;தை மட்டும் சார்ந்திருக்கும் எமது இராஜதந்திர உறவுகளை ஏனைய நாடுகளை நோக்கி நகர்த்த வேண்டும்.

விண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா? – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

பூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது.

900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்க மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளே விண்வெளியில் உள்ள செயற்கைக் கோள்களை சுட்டு வீழ்த்தும் திறனை முன்னர் கொண்டிருந்தன, 1950 ஆம் ஆண்டு அமெரிக்கா ஆரம்பித்த இந்தத் தி;ட்டத்தைத் தொடர்ந்து, 1960 களில் ரஸ்யாவும் செயற்கைக்கேளை சுட்டு வீழ்த்தும் பரிசோதனையை மேற்கொண்டிருந்தது. 2007 ஆம் ஆண்டு சீனாவும் அதில் இணைந்து கொண்டது. சீனாவும் ஏவுகணை மூலம் தனது உபயேகமற்ற செய்மதி ஒன்றை பரீட்சார்த்த முயற்சியாக 2007 ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியிருந்தது. ஆனால் சீனாவின் ஏவுகணையானது பூமியில் இருந்து 800 கி.மீ தூரத்தில் இருந்த செயற்கைக்கோளைச் சுட்டு வீழத்தியிருந்தது.

அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு செயற்கைக் கோளை சுட்டுவீழத்தும் தொழில்நுட்பத்தை தாம் கொண்டிருப்பதாகவும், ஆனால் அதற்கு 24 மாதங்கள் தேவையெனவும் இந்தியா தெரிவித்திருந்தது.

இந்தியாவின் கடந்த வார நடவடிக்கை தொடர்பில் தமக்கு முன்னரே தெரியும் எனவும், விண்வெளியில் ஏற்பட்ட வெடிப்பை கொலொராடாவில் உள்ள தமது வான்படைத் தளத்தில் இருந்து பதிவு செய்துள்ளதாகவும் அமெரிக்க வான்படையின் விண்வெளிப் பிரிவுக்கான தளபதி லெப். ஜெனரல் டேவிட் தோம்சன் அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்ற விவாதத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த முயற்சியானது சீனாவுக்கு எதிரான போட்டியாகும் என யப்பானின் கொக்கைடோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பேராசிரியர் கசூடோ சுசூக்கி தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனா மேற்கொண்டுவரும் விஸ்த்தரிப்புக்களை முறியடிக்கும் நகர்வுகளை மேற்குலகமும், யப்பானும் மிகத்தீவிரமாக மேற்கொண்டுவரும் நிலையில் யப்பான் பேராசிரியரின் கருத்து முக்கியமானது.

1990 களில் சிறீலங்காவுக்கு நிதியை வழங்கும் நாடுகளில் முதன்மையில் இருந்த யப்பானை 2000 ஆம் ஆண்டுகளில் பிற்பகுதியில் சீனா பின்தள்ளியிருந்ததுடன், சிறீலங்காவின் பல பகுதிகளை தனது ஆதிக்கத்திற்குள்ளும் சீனா கொண்டுவந்திருந்து.

இந்த நிலையில் தான் தமிழ் மக்களின் விடுதலைப்போரை தனது பிராந்திய நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மேற்குலகக் கூட்டணி தற்போது ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஊடாக சிறீலங்கா மீது தொடர் அழுத்தங்களை தக்கவைப்பதற்கு முயற்சித்து வருகின்றது. அதாவது சிறீலங்கா மீது நடவடிக்கை அற்ற ஒரு அழுத்தமான சூழ்நிலை.

UNHRC 2019 விண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா? - வேல்ஸ் இல் இருந்து அருஷ்சிறீலங்கா அரசு கேட்காமலேயே பிரித்தானியா தலைமையிலான இணைத் தலைமைக்குழு நாடுகளின் அனுசரனையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கால அவகாசம் வழங்கியதன் பின்னனியும் இதுவே.

ஆனால் இந்த நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அனைத்துலக சமூகத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் அது தகர்;த்துள்ளது.

அது மட்டுமல்லாது கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை தாம் ஏற்கப்போவதில்லை என சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளதும், நாம் கால அவகாசத்தை கோரவில்லை என சிறீலங்கா அரச தரப்பு கூறுவதும், ஐ.நா ஆணையாளரின் அறிக்கையில் பிழைகளைக் கண்டறிந்து தான் அதில் திருத்தங்களைக் கூறியதாக வடமாகாணத்திற்கான சிங்கள அரசின் ஆளுநர் பொய்யுரைப்பதும் ஐ.நாவின் நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கியுள்ளது.

அதாவது சிறீலங்கா அரசு அழுத்தமான கோரிக்கையை முன்வைக்காமலேயே ஐ.நா காலஅவகாசம் வழங்கியது என்பது தமிழ் மக்களுக்கு கடுமையான அதிதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த கால அவகாசத்திற்கு ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவுக்கு சென்று சிறீலங்கா அரசுக்கு பாதிப்புக்கள் வராதவாறு பார்த்துக்கொண்டதும், கூட்டமைப்பின் இந்த நடவடிக்கைக்கு சில புலம்பெயர் அமைப்புக்கள் ஆதரவுகளை வழங்கியதும் தமிழ் இனம் தனது வழ்நாளில் கண்ட துரோகத்திற்கான வரலாறாகும்.

எனினும் 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தாம் அனுமதிக்கப்போவதில்லை என தற்போது கூட்டமைப்பு தெரிவித்துவரும் கருத்துக்கள் நகைப்புக்கிடமானது என்பதுடன் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் அடுத்த நகர்வுமாகும்.

ஏனெனில் தொடர் காலநீடிப்புக்களுக்கு ஆதரவு வழங்கி தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தடைகளை ஏற்படுத்தும் கூட்டமைப்புத்தான் தற்போது அதில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்போவதிலலை என்று கூறுகின்றது.

ஆனால் தமிழ் மக்களிடம் உள்ள கேள்வி என்ன என்றால் நிறைவேற்றப்படாத தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்தால் என்ன அல்லது கொண்டுவராது விட்டால் தான் என்ன? என்பது தான்.

ranil sumi விண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா? - வேல்ஸ் இல் இருந்து அருஷ்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையிலேயே தனது இன மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு தீர்வுகாண விரும்பினால் அரசியல் கைதிகளாக உள்ளவர்களின் விடுதலை, தமது வாழ்நிலங்களின் விடுதலை, காணாமல்போனவர்கள் தொடர்பான தகவல்கள் போன்ற கோரிக்கைகள் தொடர்பில் தொடர்போராட்டங்களை மேற்கொண்டுவரும் தமிழ் மக்களின் கோரிக்கைளை முன்வைத்து எதிர்வரும் மாதத்தின் முன்பகுதியில் இடம்பெறவுள்ள சிறீலங்கா அரசின் வரவுசெலவுத்திட்டத்தின் மீதூன வாக்கெடுப்பை புறக்கணிக்குமா?

அதாவது பல சந்தர்ப்பங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன் உள்ளபோதும் அதனை தனது உறுப்பினர்களின் சுய விருப்பு வெறுப்புக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறம்தள்ளிவருவது ஒரு வரலாற்றுத் துரோகமாகும்.

ஆனால் தற்போது உலகின் கவனத்தை பெற்றுள்ள விண்வெளிப்போரின் அடுத்த நகர்வில் உள்ள பூகோள அரசியலை உள்வாங்குவதற்கு தமிழ் இனம் தனக்கான ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஏனெனில் 1990 களின் பிற்பகுதியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மேற்கொண்ட அணுவெடிப்பு போட்டியை போல எதிர்வரும் காலத்தில் பாகிஸ்தானும் விண்வெளிப்போரில் தனது திறமையை காண்பிக்க முற்படும், அதேசமயம், திருமலைத்துறைமுகத்தை அமெரிக்காவிடம் பறிகொடுத்த சீனா தனது அடுத்த நகர்வை வடக்கை நோக்கி ஆரம்பிக்கும்.

இலக்கு – 23 (28-4-2019)

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலக்கு 28-4-2019

இலக்கு – 22 (21-04-2019)

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு – 22 (21-04-2019)

 

இலக்கு-21 (14-4-2019)

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலக்கு 14-4-2019

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம்
11-05-19 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு  தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன்
10 Downing St, Westminster, London SW1A முன்பு ஆரம்பமாகும்
தொடர்ந்து 18ம் திகதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை
அடையாள உண்ணா விரதமும் வீதியோரக் கண்காட்சியும் துண்டுப் பிரசுர விநியோகமும் நடைபெறும் 18.05.19 அன்று பேரணி மாலை 2 மணிக்கு ஆரம்பமாகும்.

இலக்கு – 20 (07-04-2019)

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு – 20 (07-04-2019)

இலக்கு – 19 (31-03-2019)

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு – 19 (31-03-2019)

 

இலக்கு – 18 (24-03-2019)

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு – 18 (24-03-2019)