அதற்கு முதல் நாள், கீயர் ஸ்ராமரின் (Keir Starmer) தொழிற்கட்சி, ஐக்கிய இராச்சி யத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 1997ம் ஆண்டு, புதிய தொழிற்கட்சி என்ற பெயரில் ரோணி பிளேயர் (Tony Blair) ஈட்டிய வெற்றியைப் போன்று, அதிக ஆசனத்தைப் பெற்று வெற்றியை ஈட்டியிருந்தது.
பதின்நான்கு வருடக் காத்திருப்புக்குப் பின்னர், பழமைவாதக் கட்சியின் மோசமான ஆட்சிக்குப் பின்னர், தொழிற்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆனால் இங்கு, இவற்றையெல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விடயம் உற்றுநோக்கப்படவேண்டியிருக்கிது.
உண்மையில் தொழிற்கட்சி பெற்ற இந்த அமோக வெற்றி, ஸ்ராமரின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டதனால் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் ரோறி (Tory) என்று அழைக்கப்படுகின்ற பழமைவாதக்கட்சியை மக்கள் முற்றுமுழுதாக நிராகரித்ததே இதற்கான முழுமுதற்காரணம் ஆகும்.
நேற்று இரவு, பழமைவாதக் கட்சியினர் துடைத்தழிக்கப்பட்டார்கள். பழமைவாதக் கட்சி க்கு வாக்குச் செலுத்த மக்கள் விரும்பவில்லை. பழமைவாதக் கட்சியின் கோட்டை எனக் கருதப்பட்ட தொகுதிகளில் கூட, முன்னாள் பிரதம மந்திரிகளான திரேசா மே, போறிஸ் ஜோண்சன், டேவிட் கமறொன், மற்றும் பிரித்தானிய வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பிரதமராகப் பணியாற்றிய லிஸ் ற்றஸ்ற் ஆகியோரின் தொகுதி
களில் கூட அவர்கள் தோல்வியைத் தழுவியிருக் கிறார்கள்.
மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகை யில், பழமைவாதக் கட்சியினர், தங்களது 250 ஆசனங்களை இழந்திருக்கிறார்கள். பழமைவாதக் கட்சியின் முன்னணி ஆளுமைகளான, ஜேக்கப் றீஸ் மொக், பெனி மோடோண்ட், கிராண்ட் ஷப்ஸ் ஆகியோர் கூட தமது ஆசனங்களை இழந் திருக்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாதவாறு ரோறிக் கட்சியின் அமைச்சரவையைச் சேர்ந்த, 11 முன்னாள் அமைச்சர்கள் தமது பாரா ளுமன்ற ஆசனங்களைக் கோட்டைவிட்டிருக் கிறார்கள். பழமைவாதக் கட்சி முற்றாகத் துடைத் தழிக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரம், தொழிற்கட்சி அமோக வெற்றியை ஈட்டியிருக்கிறது. ஆனால் அவர் களுக்கு வாக்குச் செலுத்திய வாக்காளர்களில், மூன்றில் ஒரு வீதமானோர் மட்டுமே, அதாவது 35 வீதமானோர் மட்டுமே தொழிற்கட்சிக்கு என்று தமது வாக்குகளை அளித்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் தொழிற்கட்சி பெற்ற வாக்குகள் 1.4 வீதத்தால் மட்டுமே அதிகரித்திருக்கிறது. இது பெருமளவில் ஸ்கொட்லாந்தில் எஸ்என்பி (SNP) கட்சிக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் ஆகும். 2017ம் ஆண்டில் ஜெறெமி கோபினின் (Jeremy Corbin) தலைமையில், தொழிற்கட்சி பெற்ற வாக்குடன் ஒப்பிடும் போது, இது 5 சதவீதம் குறைவானதாகும்.
2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில், பழமை வாதக் கட்சியை பிரித்தானிய மக்கள் நிராகரித்தது போல, மீண்டும் ஒரு தடவை அந்தக் கட்சியை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள் என்றால், கோர்பின் தலைமையிலான தொழிற்கட்சியும் இவ்வாறான ஒரு வெற்றியை நிச்சயமாகப் பெற்றிருக்கும்.
பிரிட்டன் காலாதிகாலமாகப் பின்பற்றி வருகின்ற தேர்தல் நடைமுறையே இதற்கான காரணம் ஆகும். இங்கே வாக்காளர்கள் ஒரேயொரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். எந்த வேட்பாளர் அதிகமான வாக்குகளைப் பெறுகின்றாரோ அந்த வேட்பாளர் வெற்றியைத் தனதாக்கிக் கொள்வார். இந்த அணுகுமுறையால் தான் இரண்டு கட்சி ஆட்சி பிரிட்டனில் தக்கவைக்கப்படுகிறது. இது உண்மையில் மக்களது விருப்புக்கு முரணானதாகும்.
இவ்வாறான ஒரு பிரச்சினையான தேர்தல் நடைமுறையில் கூட, சுயேச்சை வேட்பாளர் களைத் தெரிவுசெய்ததன் மூலம் தொழிற்கட்சிக்கு அவர்கள் ஒரு தெளிவான செய்தியைச் சொல்லி யிருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில், ஸ்ராமர் தலைமையிலான தொழிற்கட்சி, முன்னர் தங்கள் கோட்டைகளாக விளங்கிய பல தொகுதிகளில், சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வியடைந்திருக்கிறது. காஸாவில் நிபந்தனையற்ற போர்நிறுத்தம் உடனடியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றும், பல பத்து ஆண்டுகளாக பாலஸ்தீனத்தில் தொடரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி, பாலஸ்தீன ஆதரவுத்தளத்தில் நின்றுகொண்டு, இந்த சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலை எதிர்கொண்டிருந்தார்கள். 5 தொகுதிகளில் வாக் காளர்கள், காஸாவில் நடைபெற்றுவரும் யுத்தம் தொடர்பான ஸ்ராமரின் இஸ்ரேல் ஆதரவுக் கொள்கையைப் புறந்தள்ளி, மேற்குறிப்பிடப்பட்ட பாலஸ்தீன மக்களின் பிரச்சினைக்கு ஆதரவாக போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களைத் தெரிவுசெய்திருக்கிறார்கள். பதவியிலிருந்து இறக் கப்பட்ட முன்னாள் தொழிற்கட்சித் தலைவரான ஜெறெமி கோர்பின், வடக்கு இஸ்லிங்ரன் தேர்தல் தொகுதியில் பாலஸ்தீனச் சார்பு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, இலகுவாக வெற்றியடைந்திருக்கிறார்.
தொழிற்கட்சி வேட்பாளருக்குப் பாதுகாப்பான தொகுதிகள் எனக்கருதப்பட்ட பல தொகுதி களில், போட்டியிட்ட பாலஸ்தீன சார்பு சுயேச்சை வேட்பாளர்கள், தொழிற்கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் பெரும்பான்மையை கணி சமான அளவு குறைத்திருக்கிறார்கள். இல்போட் (Ilford) தொகுதியில், தொழிற்கட்சியின் நிழல் சுகாதாரச் செயலரான, வெஸ் ஸ்றீற்றிங்கின் 5000 வாக்குகள் பெரும்பான்மையை வெறும், 500 வாக்காகக் குறைத்திருப்பவர், 23 வயதேயான பிரித்தானிய-பாலஸ்தீனப் பெண்மணி லெயான் மொஹமத் ஆவார். உண்மையில் இங்கே தொழிற்கட்சி வேட்பாளர் அரும்பொட்டில் வெற்றிபெற்றிருக்கிறார். அதே போலவே, பேர்மிங்காம் யாட்லி தொகுதியில் முன்னர் 10,000 வாக்குகள் பெரும்பான்மையைக் கொண்டிருந்த தொழிற்கட்சி வேட்பாளரான ஜெஸ் பிலிப்ஸின் பெரும்பான்மை, பாலஸ்தீன சார்புக் கொள்கையைக் கொண்டிருக்கும் சிறிய கட்சியின் சுயேச்சை வேட்பாளரால் சில நூறு வாக்குகளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாதவாறு சுயேச்சை வேட்பாளர்கள் பெற்ற வெற்றி, முஸ் லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளில், காஸா தொடர்பாக ஸ்ராமரின் கொள்கைக்குக் கிடைத்த எதிர்ப்பு என்றே பிரிட்டனின் முக்கிய ஊடகங்கள் விளக்கம் கொடுத்துள்ளன. காஸாவில் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையை, முஸ்லீம் மக்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள் என்ற தவறான புரிதலை இது பிரதிபலிக்கிறது. இவ்வாறான கருத்தை வெளியிடுபவர்கள் முஸ்லீம் மக்களிடையே பிரித்தானிய கட்சிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிளவைப் பெரிதுபடுத்தி, முஸ்லீம் மக்களுக்கு எதிரான உணர்வுகளுக்குத் தூபமிட்டு வருகின்றன.
இங்கே உண்மை மிகவும் தெளிவா னது. முஸ்லீம்களாக இருந்தாலென்ன, இல்லா விட்டாலென்ன, பிரித்தானியாவில் வாழும் மக்களில் அநேகமானோர், காஸாவில் நடக்கும் படுகொலைகள் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றும் அங்கு நீதி நிலைநாட்டப்படவும் வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். அது மட்டுமன்றி, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மூலோபாய ரீதியிலான நட்பு நாடு என்று கருதப்படும் ஒரு நாடாக இருந்தாலும், அந்த நாடு, பன்னாட்டுச் சட்டங்களை மீறுகின்ற போதும், இனப்படுகொலையை மேற்கொள்ளுகின்ற போதும், அவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் ஆற்றலை தங்கள் பிரதிநிதிகள் கொண்டிருக்க வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அத்தோடு நின்றுவிடாது, பாலஸ்தீன மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வலுக்கட்டா யமாக வெளியேற்றிய விடயத்தில், ஐக்கிய இராச்சியம் வகித்த வரலாற்றுப்பங்கை ஏற்றுக் கொள்கின்ற பிரித்தானிய மக்கள், கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளுக்குப் ஈடாக ஒரு கொள்கைவழி நடைமுறையை பிரித்தானியா இந்த விடயத்தில் பின்பற்ற வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றார்கள். இதனாலேயே, காஸா தொடர்பாக தொழிற்கட்சி கொண்டிருக்கும் கொள்கைகள், அந்த மக்கள் தொழிற்கட்சியை விட்டுச் செல்லக் காரணமாக அமைந்திருக்கிறது.
கடந்த தேர்தலில் நிகழ்ந்த இன்னொரு முக்கிய நிகழ்வு, 14 வீதமான வாக்குகளையும் பாராளுமன்றத்தில் நான்கு ஆசனங்களையும் தனதாக்கிக் கொண்ட தீவிர வலதுசாரிக் கொள்கையைக் கொண்டதும், குடிவரவுக்கு எதிரானதுமான கட்சி பெற்றுக்கொண்ட வெற்றியாகும். முன்னாள் யுகேஐபியின் (UKIP) தலை வரும் பிரெக்சிற் கொள்கையைத் தீவிரமாக முன்னெடுத்தவருமான நைஸல் பராஜ் (Nigel Farage), இப்போது கிளாக்ரன் தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சீர்திருத்தக் கட்சி சார்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத போதிலும், குடிவரவு மற்றும் ஐரோப்பாவுடனான உறவு போன்ற விடயங்களில் பிரித்தானியக் கொள்கை களை வடிவமைப்பதில், கடந்த காலத்தில் முக்கிய பங்கை அவர் வகித்திருக்கிறார். தற்போது அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டதால் இன்னும் அதிக செல்வாக்கை அவர் செலுத்துவார் என்பதை எதிர்பார்க்கலாம்.
பாராளுமன்றத்தில் உள்ளே இருந்து கொண்டு, குடிவரவு தொடர்பான விடயங்களில் கடுமையான கொள்கைகளைப் பின்பற்ற தொழிற்கட்சிமேல் அவர்கள் அழுத்தத்தைப் பிரயோகிப்பார்கள். இவ்வாறான அழுத்தத்தி லிருந்து தன்னை விடுவித்து, பன்னாட்டுச் சட்டங் களுக்கு ஏற்ற வகையிலும், அறநெறி ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், குடிவரவு மற்றும் அகதித்தஞ்சம் வழங்கும் விடயங்கள் தொடர்பான கொள்கைகளை நாட்டுக்குப் பயன் தரக்கூடிய வகையில் ஸ்ராமர் வகுக்க வேண்டியிருக்கும்.
பதின்நான்கு வருடங்களாகத் தொடர்ந்த, பழமைவாதக் கட்சியின் ஆட்சியில், பிரித்தானிய மக்கள் இழந்தது அதிகம். எமது வாழ்க்கை முன்னரை விட அதிகம் கஷ்டம் நிறைந்ததாக மாறிவிட்டது. எமது நாட்டின் பொதுச்சேவைகள் அனைத்தும் முடங்கிப்போகும் நிலைக்கு வந்து விட்டன. அதுமட்டுமன்றி, பாலஸ்தீனத்துக்கு ஆதரவான சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றி சுட்டிக்காட்டுவது போல, ஓர் ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டுத் துன்புறும் ஓர் மக்கள் சமூகம் மீது மேற்கொள்ளப்படும் ஓர் இனப்படுகொலை யுத்தத்துக்கு, எமது அரசு ஆதரவை வழங்கி வருவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த மக்க ளின் வரலாற்றை நிர்ணயித்ததில் காலனீய பிரித்தானியாவுக்கு அதிகமான பங்கு உண்டு.
மாற்றம் ஒன்று தேவை என்பது எல்லாரதும் எதிர்பார்ப்பு ஆகும். இதனால் தான் பழமைவாதக்கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள். நாட்டின் தலைமைத்துவத்தைக் கையிலெடுக்கும் இத்தருணத்தில், தனது வெற்றி முழுமையானது அல்ல என்பதையும், தமது குறைகளைத் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையை மக்களில் அதிகமானோருக்கு அவரால் கொடுக்க முடியவில்லை என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தலில் மக்கள் அளித்திருக்கும் முடிவுகளை, தான் நன்கு புரிந்திருக்கிறேன் என்பதை ஸ்ராமர் செயலில் காட்ட வேண்டும். பழமைவாதக் கட்சியை நாம் முற்றுமுழுதாக நிராகரிக்கிறோம். ஆனால் நிபந்தனையற்ற வகை யில் உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்பது அதன் பொருள் அல்ல.
ஐக்கிய இராச்சியத்தின் பிரதம மந்திரி என்ற வகையில், தான் ஆற்றிய முதலாவது உரையில், இந்த விடயத்தைத் தான் புரிந்துகொண்டிருப்பதாக வெளிப்படுத்திய ஸ்ராமர், இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கும் பிரதம மந்திரியாக தான் இருக்க விரும்புவதாகவும் குறிப்பாக தனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பிரதமராக இருக்க விரும்புவதாக அந்த உரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயத்தை ஸ்ராமர் காத்திரமாக எடுப்பாராக இருந்தால் – உண்மையில் நாட்டுக்காக அவர் காத்திரமாக எடுத்தே ஆகவேண்டும் – தனது கட்சியிலிருந்து தான் வெளியேற்றிய இடதுசாரிக்கொள்கையையுடைய தொழிற்கட்சி உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களது தேவை களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், வெளிநாட்டுக் கொள்கையில், மனித உரிமையைக் கடைப்பிடித்து, பன்னாட்டுச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அனைத்துச் சக்திகள் போன்ற அனைவரையும் அவர் உள்வாங்க வேண்டும். சுயேச்சை வேட்பாளர்களையும், இடது
சாரிக் கொள்கையையுடைய சிறிய கட்சிகள் சார்ந்த பிரதிநிதிகளையும் அவர் அலட்சியம் செய்யக்கூடாது. காஸா, காலநிலை மாற்றம் போன்ற விடயங்களில் அவர்களது கருத்தையும் ஸ்ராமர் செவிமடுத்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்யாவிட்டால், பழமைவாதக் கட்சியின் தோல்வியின் மீது அவர் பெற்றிருக்கும் வெற்றி, பொருள் அற்றதாகி விடும். சீர்திருத்தக் கட்சியிடமிருந்து அதிகமான அழுத்தத்தை அவர் எதிர்கொள்ள வேண்டி யிருக்கும் என்பது மட்டுமன்றி இடதுசாரிக் கட்சிகளிடமிருந்து எதிர்ப்பையும் பொறுப்புக் கூறலுக்கான அழுத்தத்தையும் நிச்சயமாக அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவான இடதுசாரிக் கட்சிகள் கடந்த தேர்தலில், குறிப்பிடத்தக்க தாக்
கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பழமைவாதக்கட்சி வெளியேற்றப்பட்டுள்ள ஒரு சூழமைவில், தொழிற்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பின்புலத்தில், பலவிதமான கொள்கைகளைக் கொண்ட இச்சிறுகட்சிகள் ஒன்றுசேர்ந்து, காஸா விடயம் போன்ற தங்களுக்கு முக்கியமான விடயங்களில், உருப்படியான நடவடிக்கைகளை அரசு எடுக்க, அதற்கு அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும்.
இதுவரை காலமும் ஐக்கிய இராச்சியத்தில் பின்பற்றப்பட்டு வந்த இரு கட்சி ஆட்சி தற்போது முடிவுக்கு வந்துவிட்டது என்பதை இந்தத் தேர்தல் சுட்டிக்காட்டுகிறது. தங்களது கட்சிக்குப் பிரமாணிக்கமாக இருப்பதைத் தவிர்த்து, தமது விழுமியங்களின் அடிப்படையில் மக்கள் வாக்களித்திருக்கும் இச்சூழலில், அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இடது சாரிக்கட்சிகள் இருக்கின்றன என்பது அவர்களால் இங்கு சரியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டும்.,
நன்றி: அல்ஜஸீரா