இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக 850,000 தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகளின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிட்டால் மூன்று மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.
போதிய எரிபொருள் இன்றி அவர்களால் தொழிலில் தொடர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் வாகன இலக்கத் தகடுகளின் இலக்கங்களின் அடிப்படையில் வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்தார்.
தற்போது தொழில்துறையில் அங்கம் வகிக்கும் நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே இதுபோன்ற முன்மொழிவுகளை செயற்படுத்த வேண்டும்.
நடைமுறை திட்டங்களுக்கு தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நாளொன்றுக்கு ஐந்து லீற்றர் எரிபொருளை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக முச்சக்கர வண்டி சாரதிகளை இனங்கண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அல்லது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக அவர்களுக்கு எரிபொருளை வழங்க முடியும் என்றார்.
அதிகாரிகள் அரச அமைப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, கடுமையான திட்டத்தை விரைவில் செயற்படுத்த வேண்டும்.
ஒரு அமர்வை மட்டும் இயக்குவதற்கு 2,000 ரூபா பெற்றோலைப் பெறுவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் எரிபொருள் வரிசையில் காத்திருப்பதும் இன்னும் மூன்று நாட்களுக்கு வரிசையில் திரும்புவதும் மக்கள் முச்சக்கர வண்டி வர்த்தகத்தை கைவிடுவதற்கு மாத்திரமே வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கும் முச்சக்கரவண்டி சாரதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அரசாங்கம் மிகுந்த அக்கறை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.