அதே சமயம், நவுருதீவில் மேலும்
அமெரிக்கா- அவுஸ்திரேலியா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், இதுவரை 400க்கும் மேற்பட்ட அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
தற்போது அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்படும் 9 அகதிகளில் 3 அகதிகள் கொரோனா தொற்றினால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த டெக்சாஸ் மாநிலத்தில் மீள்குடியமர்த்தப்பட இருக்கின்றனர்.
“அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பாக இந்த அகதிகள் மீள்குடியமர்த்தப்பட வாய்ப்பு இருக்கும் போது, நிச்சயத்தன்மையற்ற எதிர்காலம் கொண்ட அமெரிக்காவுக்கு இன்னும் அகதிகளை அவுஸ்திரேலிய அரசு அனுப்புவது அதிர்ச்சியாக உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார் Refugee Action Coalition அமைப்பின் பேச்சாளர் ஐன் ரிண்டோல்.