காணாமல்போனவர்களின் உறவுகள் – பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

காணாமல்போனவர்களின் உறவினர்களை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது ட்விட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து  இலங்கையின் மனித புதைகுழிகள் தொடர்பான புதிய அறிக்கையின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.