தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக் கிழமைவரை 3 நாட்களுக்குத் தொடர் போராட்டம் நடைபெறும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளா் க.சுகாஷ் தெரிவித்துள்ளாா்.
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று ஓராண்டை எட்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வெசாக் தினத்தை முன்னிட்டு பௌத்த அமைப்புக்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ள நிலையில் இன்று போராட்டமும் ஆரம்பமாகியுள்ளது.