ரோஹிங்கியா அகதிகள் விவகாரத்தில் உலக நாடுகள் தங்களை சர்வதேச கடமைகளை நிறைவேற்றுவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மலேசிய அரசு வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக 1951 அகதிகள் சாசனத்தில் கையெழுத்திட்ட நாடுகள் ரோஹிங்கியா அகதிகளை மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மலேசியா தெரிவித்துள்ளது.
16வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பேசிய மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், மலேசியாவின் அகதிகள் மக்கள் தொகையில் 57 சதவீதம் பேர் ரோஹிங்கியாக்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.