விவாதத்துக்கு வருவதற்கு சஜித் பிரேமதாச மறுத்துவிட்டாா் – அநுரகுமார தெரிவிக்கிறாா்

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அதே பொருளாதாரக் குழுவே என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரக் குழுவுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி விடவில்லை என்றும் அவர் கூறினார். ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கும் மக்கள், வேட்பாளர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற துலாவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு சஜித் பிரேமதாசவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர் அதில் பங்கேற்க மறுத்துவிட்டார். அனைத்து சனல்களுக்கும் பொதுவான இடத்தில் இந்த விவாதத்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அதற்கு முன் பொருளாதார குழு விவாதத்தை முன்னுரிமையாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்ததாகக் கூறினார்.