டியாகோகார்சீயாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிலர் தற்கொலைக்கு முயற்சி

டியாகோகார்சீயா தீவில் 20 மாதங்ளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இந்துசமுத்திரத்தில் உள்ள பிரிட்டனிற்கு சொந்தமான சிறிய தீவில் இலங்கையை சேர்ந்த 89 குடியேற்றவாசிகள் சிக்குண்டுள்ளனர்.

டியாகோ கார்சியாவில் தான் பாலியல்துஸ்பிரயோகத்திற்குள்ளானதாக ஒரு பெண் தெரிவித்துள்ளார்- மேலும் இங்கு உண்ணாவிரதப்போராட்டங்களும் இடம்பெறுகின்றன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.