பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று கம்பனிகளின் அடக்கு முறைகளுக்கு முகம்கொடுத்து வருன்ற நிலையில், இன்று மஸ்லியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் “ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு இடம் பெற்றுள்ளது எனக் கூறப்பட்டாலும் தொழிலாளர்களின் தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாளென்றுக்கு ஒருவர் 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டியுள்ளது.
அதே போல பல தோட்டங்களில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. நலன்புரி சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான அடக்குமுறை செயற்பாடுகளை கம்பனிகள் நிறுத்த வேண்டும்” என கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது.