ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படைகள் தொடர்ந்து வெளியேறி வருவதால், ஆப்கானிஸ்தானின் பல பகுதிகள் தாலிபானின் கட்டுப்பட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் 200 மாவட்டங்களில் ஆப்கான் படையினருக்கும் தாலிபானுக்கும் சண்டை நடந்து வரும் நிலையில், ஏற்கனவே 2 இலட்சம் ஆப்கான் மக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர்.
தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்ற சூழல் மீண்டும் அகதிகளை நெருக்கடிக்கு இட்டுச் செல்லக் கூடிய ஆபத்து நிலவுகின்றது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானியர்களே தங்கள் நாட்டை மீண்டும் கட்டி எழுப்பிக் கொள்ள வேண்டும் என்றும் அது அமெரிக்காவின் பொறுப்பு இல்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.