போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இதுவரை 60 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீது ரஷிய படையெடுத்ததிலிருந்து, அந்த நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 60 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அவர்களில் 90 சதவீதத்தினர் பெண்களும் சிறுவர்களும் ஆவர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.