பிரித்தானிய தோ்தலில் ஈழத் தமிழரான உமா குமரன் பெரு வெற்றி

uma பிரித்தானிய தோ்தலில் ஈழத் தமிழரான உமா குமரன் பெரு வெற்றிபிரித்தானியா நாடாளுமன்றம் செல்லும் ஈழத்தமிழ் உறுப்பினருக்கு இலக்கு ஊடகம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது

பிரித்தானியா தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமாரன் அவர்கள், 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ளார்.

பிரித்தானியாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பங்கெடுத்து பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு செல்லும் முதலாவது ஈழத் தமிழ் பெண் உமா ஆவார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எல்லாக் கட்சி உறுப்பினர்களையும் விட பல மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.

பிரித்தானிய பொது தேர்தலையொட்டி, மொத்தமுள்ள 650 தொகுதிகளில் வியாழக்கிழமை(04) வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் கியர் ஸ்டாமர் தலைமையிலான தொழிலாளர்கட்சி, பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த தேர்தலில் அதிகளவில் இந்தியர்க்கள் போட்டியிட்டனர்.இந்த நிலையில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் உமா குமரன், லண்டன் Stratford and Bow தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல் 3,144 வாக்குகளை மட்டுமே பெற்று 4வது இடத்தை பெற்றார்.

இவரது குடும்பம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போருக்கு பின்னர் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். லண்டனில் பிறந்து வளர்ந்த அவர், அங்கேயே படித்து அரசியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

உமா 2009ம் ஆண்டு முதல் 2010 வரை தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டான் பட்லரின் நாடாளுமன்ற ஆராய்ச்சியாளராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றியிருந்தார்.

அவரின் வெற்றிக்கு இலக்கு ஊடகம் ஈழத் தமிழ் மக்கள் சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்கான குரலாக அவர் பிரித்தானியா நாடாளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும் எனவும் வேண்டி நிற்கின்றது.