இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் வன்முறைகள்: அமெரிக்கா பயண எச்சரிக்கை

அமெரிக்காவின் பயண ஆலோசனை அறிவுரை அமெரிக்கர்கள் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்வதாக இருந்தால் மறுபரிசீலனை செய்யும் நிலையை 3-ல் வைத்துள்ளது. இதற்கிடையில், மணிப்பூர் நிலை 4-ன் கீழ் வருகிறது. இது இங்கே பயணம் செய்யாதீர்கள் என்பதைக் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் பயணம் செய்யும் அமெரிக்க அரசு ஊழியர்கள் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்வதற்கு முன், முன்அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், அவ்வப்போது நடக்கும் வன்முறைச் செயல்கள் காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய அமெரிக்கா தனது நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.